தாறுமாறாய் தவிக்க வைக்கும் தங்கம்! இந்தியாவில் மட்டும் இத்தனை டன்னா? ஒரு வீட்டில் எவ்வளவு வைக்கலாம்?
சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனr. அதே நேரத்தில் இந்தியாவில் ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்து இருக்கலாம் என்ற கேள்வி இயல்பாகவே எழுமல்லவா? அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஒரு உலோகமல்ல. அது கலாசாரம், பாரம்பரியம், பாதுகாப்பு, முதலீடு என பல அர்த்தங்களை கொண்டது. தங்கம் வாங்குவது, அணிவது, வீட்டில் சேமிப்பது என்பவை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பழக்கமாக உள்ளது.
திருமணம், பண்டிகை, பிறப்பு, சுப நிகழ்ச்சிகள் என எந்த முக்கிய தருணமாக இருந்தாலும் தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் தங்க நகைகள் பெண்களின் அழகுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவில்லை.

தங்கம்
அது பெண்களுக்கான பொருளாதார பாதுகாப்பு என்றே பார்க்கப்பட்டது. காலப்போக்கில் நகைகளின் வடிவங்கள் மாறினாலும், தங்கத்தின் மதிப்பும் முக்கியத்துவமும் குறையவில்லை. இன்றும் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகவே மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் தங்கம் பாதுகாப்பாக வைத்திருக்கும் பழக்கம் தொடர்கிறது. இதற்கு ஆதாரமாக, உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. உலகம் முழுவதும் உள்ள தங்க கையிருப்பில் சுமார் 11 சதவீதம் தங்கம் இந்திய பெண்களிடமே இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தங்கம் சட்ட விதி
எண்ணிக்கையில் சொல்வதானால், இந்திய பெண்களிடம் கிட்டத்தட்ட 24 ஆயிரம் டன் தங்க நகைகள் கையிருப்பில் உள்ளன. இதைவிட சுவாரசியமான தகவல் என்னவென்றால், உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளின் மொத்த தங்க கையிருப்பைக் காட்டிலும், இந்திய பெண்களிடம் இருக்கும் தங்க நகைகளின் அளவு அதிகம். அமெரிக்கா சுமார் 8 ஆயிரம் டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 டன், ரஷியா 1,900 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கின்றன.
24 ஆயிரம் டன் தங்கம்
ஆனால் இந்திய பெண்களிடம் மட்டும் 24 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறப்படுவது, இந்தியாவில் தங்கத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக காட்டுகிறது. இவ்வளவு தங்கம் வைத்திருக்கிறோமே, இது சட்டப்படி சரியா? ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்ற கேள்வி பலருக்கும் நீண்ட நாட்களாக உள்ளது. இதற்கு வருமான வரித்துறை தெளிவான விளக்கத்தையும் வழங்கியுள்ளது. உண்மையில், ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறார் என்பதற்காகவே வருமான வரித்துறை கேள்வி எழுப்புவதில்லை.
எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்
ஆனால் அந்த தங்கம் வாங்கப்பட்ட வருமானத்தின் ஆதாரம் என்ன, அந்த வருமானம் கணக்கில் காட்டப்பட்டுள்ளதா என்பதையே அவர்கள் பார்க்கிறார்கள். பாரம்பரியமாக கிடைத்த நகைகள் என்றால், அதற்கான குடும்ப பின்னணி, பழைய ஆவணங்கள் போன்றவை முக்கியமாகின்றன. சட்டப்படி ஒரு திருமணமான பெண் அதிகபட்சமாக 500 கிராம் வரை தங்க நகைகள் வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண் என்றால் 250 கிராம் வரை வைத்திருக்கலாம். ஆண்கள் அதிகபட்சமாக 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதி உள்ளது.
தங்கம் வரம்பு
இதன் அடிப்படையில், திருமணமான தாய், திருமணமாகாத மகள் மற்றும் ஒரு ஆண் உறுப்பினர் கொண்ட குடும்பத்தில் சுமார் 850 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம் என்பது ஒரு பொதுவான கணக்காக சொல்லப்படுகிறது. இவை எல்லாம் ஒரு தோராய வரையறைகளே. ஒருவர் வீட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு, அவர்களின் வருமானத்திற்கு ஏற்றதாக இருந்தால் எந்த சட்ட சிக்கலும் இல்லை. இதற்கும் அதிகமாக தங்கம் வைத்திருப்பது சட்டவிரோதம் அல்ல. ஆனால் அதற்கான வருமானத்தை சரியான முறையில் கணக்கில் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
தங்கம் விலை இனி உயருமா? உயராதா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்.. ராக்ஃபெல்லர் வார்னிங் -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications