Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகிறீர்களா? எவ்வளவு தங்கம் எடுத்துட்டு வரலாம்! மத்திய அரசின் புது ரூல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சுங்க விதிகளில் மத்திய நிதியமைச்சகம் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த "பேக்கேஜ் விதிகள்" மாற்றப்பட்டு, 2026 பிப்ரவரி 2, முதல் "சுங்கப் பேக்கேஜ் (அறிவிப்பு மற்றும் செயலாக்கம்) ஒழுங்குமுறை 2026" என்ற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பயணிகள் கொண்டு வரும் இதரப் பொருட்களுக்கான சலுகைகளும் புதிய விதிகளில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஏற்படும் அலைக்கழிப்புகளைக் குறைக்கவும், விதிகளை எளிமைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

gold rate silver investment

தங்க நகைகளுக்கு எவ்வளவு சலுகை?

புதிய விதிகளின்படி, ஒரு ஆண்டிற்கும் மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்க நகைகளை வரி ஏதுமின்றி கொண்டு வருவதற்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

முக்கிய மாற்றமாக, இதில் தங்கம் அல்லது வெள்ளி என்று தனித்தனியாகக் குறிப்பிடப்படாமல், பொதுவாக நகைகள் (Jewellery) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, பெண் பயணிகள்: 40 கிராம் எடை வரையிலான நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம்.

ஆண் பயணிகள் உள்ளிட்ட இதரப் பயணிகள்: 20 கிராம் எடை வரையிலான நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம்.

பயணிகள் தாங்கள் கொண்டு வரும் நகைகள் குறித்த விவரங்களை 'இந்திய சுங்க அறிவிப்பு படிவத்தில்' (Customs Declaration Form) கட்டாயம் குறிப்பிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் நகைகள் இருந்தால், பழைய நகைகளின் எடை மற்றும் மொத்தம் கொண்டு வரப்படும் நகைகளின் எடை ஆகியவற்றைத் தனித்தனியாகத் தெரிவிக்க வேண்டும்.

இதரப் பொருட்களுக்கான வரிச்சலுகை விவரங்கள்:

பயணிகள் கொண்டு வரும் இதரப் பொருட்களுக்கான சலுகைகளும் புதிய விதிகளில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பொதுவான பொருட்கள்: விமானம் அல்லது கப்பல் வழியாக வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் 75,000 ரூபாய் வரையிலான பொருட்களை வரி இன்றி கொண்டு வரலாம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வரம்பு 25,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நில எல்லை (Land Border) வழியாக வருபவர்களுக்கு எவ்வித வரிச்சலுகையும் கிடையாது.

மது மற்றும் புகையிலை: அனைத்துப் பயணிகளும் 2 லிட்டர் வரையிலான மதுபானம் அல்லது ஒயின் கொண்டு வர அனுமதிக்கப்படுவர். புகையிலையைப் பொறுத்தவரை, 100 சிகரெட்டுகள் அல்லது 25 சுருட்டுகள் அல்லது 125 கிராம் புகையிலை வரை வரி இன்றி கொண்டு வரலாம்.

லேப்டாப்: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகள், ஒரு புதிய லேப்டாப் அல்லது நோட்பேடைத் தங்களது பேக்கேஜில் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் தடை?

புதிய விதிகளின்படி சில பொருட்களை இந்தியாவுக்குள் கொண்டு வரக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது:

இந்தியாவின் எல்லைகளைத் தவறாகக் காட்டும் வரைபடங்கள் மற்றும் புத்தகங்கள்.

போதைப்பொருள் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் மருந்துகள்.

அறிவுசார் சொத்துரிமை மீறப்பட்ட (போலிப் பிரதிகள்) பொருட்கள்.

வனவிலங்கு பொருட்கள் மற்றும் சில குறிப்பிட்ட பறவைகள், விலங்குகள்.

கள்ள நோட்டுகள் அல்லது நாணயங்கள்.

இந்த புதிய விதிகள் மூலம் விமான நிலையங்களில் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது குறையும் என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இது பெரும் நிம்மதியைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+