Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 300% லாபம் கொடுத்த தங்கம் முதலீடு.. மத்திய அரசு சொன்ன அசத்தல் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025ஆம் ஆண்டில் முதிர்வடையும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் 300%க்கும் அதிகமான வருவாயைப் பெற்றுள்ளனர். தங்க விலைகள் உச்சம் தொட்டதால், பல பத்திரங்கள் முதிர்வின்போது 300%க்கும் மேலான முழுமையான வருவாயை வழங்கி உள்ளன. இது முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தைத் தந்துள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. .

2015ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு வெளியிட்ட தங்கப் பத்திரங்களுக்கான (SGBs) வட்டிச் செலவு ₹6,055.39 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மொத்த மீட்புப் பொறுப்பு அதாவது முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை ₹11,801.12 கோடியைத் தொட்டுள்ளது.

gold rate silver investment

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலேவின் கேள்விக்கு மத்திய அரசு இதை பதிலாக வழங்கி உள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 2015 முதல் 2024-25 (உத்தேச) நிதியாண்டு வரையிலான SGB பத்திரங்களுக்கான இந்த வட்டிச் செலவு மற்றும் மீட்புப் பொறுப்பை உறுதிப்படுத்தினார். உயர்ந்து வரும் தங்க விலைகளுக்கு மத்தியில், மீட்புச் சுமையைக் கையாள அரசு ஒரு தங்க இருப்பு நிதியை (Gold Reserve Fund) உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவரன் தங்கப் பத்திர திட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசின் சார்பாகச் சவரன் தங்கப் பத்திர திட்டத்தை (Sovereign Gold Bond - SGB) 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு ஒரு மாற்று வழியாக இது உருவாக்கப்பட்டது. பாரம்பரியமாக, இந்தியர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். ஆனால், அதைச் சேமிப்பதும் பாதுகாப்பதும் சில சமயங்களில் ஆபத்தாக அமையலாம்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, சவரன் தங்கப் பத்திர திட்டம் உருவானது. இத்திட்டத்தின் கீழ், நகைகள் அல்லது நாணயங்களாகத் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக, காகித வடிவிலோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ தங்கத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். இந்த பத்தரங்களின் மதிப்பு தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்க மதிப்பில் இருந்து இந்தப் பத்திரங்களை வாங்கலாம். இந்தப் பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். இருப்பினும், முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

சவரன் தங்கப் பத்திர திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, தங்கத்தின் விலை உயர்வுக்கு இணையாக, அரசு ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டியை (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்) வழங்குகிறது. முதிர்ச்சியின் போது, முதலீட்டாளர்களுக்குத் தங்கத்தின் சந்தை மதிப்பு பணமாக வழங்கப்படும். இது நேரடியாகத் தங்கமாக வழங்கப்படாது.

தங்கப் பத்திரங்களுக்கான (SGBs) செலவு

இந்த பத்திர நிதிக்கு மட்டும் 2024-25 நிதியாண்டில் ₹28,000 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிகரித்து வரும் தங்க விலைகளால் ஏற்படும் மீட்புப் பொறுப்புகளை அரசு திறம்பட நிர்வகிக்க திட்டமிட்டுள்ளது. அதேசமயம், முதலீட்டாளர்கள் SGBகள் மூலம் அதிக லாபம் ஈட்டியுள்ளனர்.

குறிப்பாக, 2025ஆம் ஆண்டில் முதிர்வடையும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் 300%க்கும் அதிகமான வருவாயைப் பெற்றுள்ளனர். தங்க விலைகள் உச்சம் தொட்டதால், பல பத்திரத் தொடர்கள் முதிர்வின்போது 300%க்கும் மேலான முழுமையான வருவாயை வழங்கின. இது முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தைத் தந்தது.

டிசம்பர் 11, 2025 அன்று முதிர்வடைந்த SGB 2017-18 தொடர் XI ஓர் உதாரணம். 2017இல் ஆன்லைன் வழியில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 340% முழுமையான வருவாயும், ஆஃப்லைன் வழியில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 333% லாபமும் கிடைத்தன. வெளியீட்டு விலைகளில் இருந்த மாறுபாட்டே இந்த வித்தியாசத்திற்குக் காரணம்.

SGBகள் முதலீட்டாளர்களுக்கு இருவகை வருவாயை வழங்குகின்றன

ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டி (இது அரையாண்டுக்கு ஒருமுறை வங்கிக் கணக்குகளில் வரவு செய்யப்படும்) மற்றும் தங்க விலை உயர்வால் கிடைக்கும் மூலதன ஆதாயம். பத்திரங்கள் வெளியிடப்பட்டதற்கும், மீட்கின்றதற்கும் இடையிலான தங்க விலை வேறுபாடே மூலதன ஆதாயத்திற்குக் காரணம். இதனால், தங்கம் விலை உயரும்போது SGBகள் கவர்ச்சிகரமான முதலீடாகின்றன.

தங்கப் பத்திரங்களுக்கு எட்டு ஆண்டுகள் முதிர்வு காலம் உண்டு. இதன் மீட்பு விலை, இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கம் லிமிடெட் (IBJA) வெளியிடும் 999 தூய தங்கத்தின் முந்தைய மூன்று பணி நாட்களின் சராசரி இறுதி விலையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

ANZ வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு $4,400 ஆக உயரும் என்று கணித்துள்ளது. மேலும், ஜூன் 2026-க்குள் $4,600 என்ற உச்சத்தை எட்டக்கூடும் என்றும், பின்னர் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கொள்கைகளை தளர்த்தும் சுழற்சியை முடிக்கும்போது இரண்டாம் பாதியில் சரிவு ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் SGBகள் மூலம் வரக்கூடிய வருவாய், வட்டி மதிப்பு அதிகரித்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+