13 வயது வந்தும் பெண் குழந்தைகள் age attend செய்யவில்லையா.. "இதை" சாப்பிட்டால் போதும்!
சென்னை: செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா? இது இதயத்தை காக்கிறது. நல்ல பயன்களை கொண்டது.
இயற்கையின் படைப்புகளில் அழகான விஷயங்கள் உள்ளன. அவற்றில் பூக்களை பார்க்கும் போது அவை நம் கண்களையே பறிக்கும் அளவுக்கு அழகாக இருக்கும். செடிகளில் அவற்றை பார்க்கும் போது எத்தனை அழகு!
பூக்களை பறித்து நம் தலையில் வைத்துக் கொள்ளலாம், சுவாமி படங்கள், சிலைகளுக்கு போடலாம். இப்படி பூக்களில் மருத்துவ குணங்களை கொண்ட பூக்களும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் பூக்கள் உள்ளன.

அந்த வகையில் மருத்துவ நலன்கள் இருக்கும் பூக்கள் என்றால் அது செம்பருத்தி பூக்கள். இதில் ஒற்றை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி என இருக்கிறது. அதில் ஒற்றை செம்பருத்தியைத்தான் நாம் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறோம். அதில் கூட சிவப்புதான் சிறந்தது. இதில் வெள்ளை, மஞ்சள், வெளீச் பிங்க் என நிறைய நிறங்கள் உள்ளன.
எனவே சிவப்பு நிற ஒற்றை செம்பருத்தியை விடாதீர்கள். இதில் 5 இதழ்கள் இருக்கும். இந்த செம்பருத்தி இதயத்திற்கு பாதுகாவலன். இந்த பூவின் இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இல்லாவிட்டால் கொதிக்க வைத்து வடிக்கட்டி சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் இதய ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகள் கரையும். கொழுப்புகள் படிவதைத் தடுக்கும்.
இது ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ரத்த சோகையை நோயை குணப்படுத்தும். ரத்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவதால்தான் ரத்த சோகை ஏற்படுகிறது. இந்த செம்பருத்தியில் அதிக அளவு இரும்பு சத்து இருக்கிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறவும் இது பெரும் பங்கு வகிக்கிறது.
எல்லாவற்றையும் விட முக்கியமானது மாதவிடாய் பிரச்சினைகளை தீர்க்கும். அது போல் வெள்ளைப்படுதலையும் இது தீர்த்து வைக்கிறது. சிறுநீர் பிரச்சினைக்கு அருமருந்து. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு செம்பருத்தி பூவை கஷாயமாக்கி சாப்பிட்டு வர வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த செம்பருத்தி இதழ்களை கொதிக்க வைத்து குடித்து வந்தால் முகம் பொலிவு பெறும். நல்ல சிகப்பான தோற்றத்தை அளிக்கும். காய்ந்த செம்பருத்தியை சீயக்காயுடன் போட்டு அரைத்து பயன்படுத்தலாம். பேன், பொடுகு தொல்லை நீங்கும். இது தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கும் உதவும்.
குழந்தை இல்லாத பெண்கள் இந்த செம்பருத்தி பூக்களையும் அதன் மகரந்தத்தையும் சேர்த்து பாலில் காய்ச்சி கணவன், மனைவி இருக்கும் குடித்து வந்தால் விரைவில் கருத்தரிக்க வாய்ப்புண்டு. அது போல் உரிய வயது வந்தும் இன்னும் பெண் குழந்தைகள் பருவமடையவில்லையா, அப்படியென்றால் செம்பருத்தி பூக்களை நெய்யில் வதக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். செம்பருத்தி பூக்கள் நம் ரத்தத்தை சுத்திகரிக்கும்.












Click it and Unblock the Notifications