Chennai Crow Death: சென்னையில் காகங்கள் கொத்துக் கொத்தாக இறந்தது ஏன்? டாக்டர் விளக்கம்
சென்னை: சென்னையில் காகங்கள் கொத்துக் கொத்தாக இறந்து விழுந்தது எதனால்? பறவைகளுக்கு உள்ள H5N1 என்ற வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவுமா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: அண்மையில் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காகங்கள் இறந்து விழுந்த செய்தியை அனைவரும் அறிவீர்கள்.

இது எதனால் நடந்தது என பார்த்த போது H5N1 வைரஸ் தொற்றினால் அது இறந்தது தெரியவந்தது. H5N1 என்றால் என்ன? எப்படி மனிதர்களிடையே பருவகாலங்களில் ஆண்டுதோறும் காய்ச்சல் வருகிறதோ அது போல்தான் பறவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்தான் எச்5என்1.
இந்த வைரஸால் மனிதர்களுக்கு பிரச்சனையா என கேட்டால் இப்போதைக்கு பெரிய பிரச்சனை இல்லை. மனிதரிடம் இருந்து இந்த வைரஸ் இன்னொரு மனிதருக்கு பரவவில்லை. எனவே இந்த வைரஸ் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம்.
இது பறவைகளிடையே மிகவும் வேகமாக பரவக் கூடிய வைரஸாக இருந்து வருகிறது. இதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பறவைகள் எங்காவது கொத்து கொத்தாக இறப்பதை பார்த்தால் உடனே கால்நடைத் துறையிடம் சொல்ல வேண்டும்.
இறந்த பறவையை கிளவுஸ் இல்லாமல் தொடக் கூடாது. இறக்க போகும் பறவைகளுக்கு எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் முதலுதவி சிகிச்சை அளிக்கக் கூடாது. இப்படி செய்தால் அந்த தொற்று நமக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது.
முட்டை, கோழி இறைச்சிகளில் இருந்து இந்த வைரஸ் நமக்கு பரவாது. ஆனாலும் முட்டை, மாமிசத்தை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பச்சை முட்டையை குடிப்பது, முட்டையை அரைக்குறையாக சமைத்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
யாருக்காவது இந்த தொற்றுடைய பறவைகளை தொட்ட பிறகு காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுக்க வேண்டும்.
இந்த எச்5என்1 வைரஸுக்கு மருந்துகள் இருக்கின்றன. இந்த மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளிலும் இருக்கின்றன. எனவே பறவைக் காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு சிகிச்சை இல்லை என நினைத்து பயப்படாதீர்கள். எனவே விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். இது குறித்து பீதியடைய வேண்டாம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சமையல் கேஸ் தட்டுப்பாடா? டயட்டுக்கு நோ எக்ஸ்க்யூஸ்! பேலியோ இருக்கே! 250 ரூபாய் போதும்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications