மீனில் ஆச்சரியம் பாருங்க.. கெட்டுப்போன மீன் இப்படித்தான் இருக்கும்.. மீனை வாங்கினால் இதை மறக்காதீங்க
சென்னை: மீன்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? ரசாயனம் பூசப்பட்ட மீன்களை சாப்பிட்டால், அதனால் ஏற்படும் உடல்நலக்கேடுகள் என்னென்ன தெரியுமா?
எப்போது மீன்களை வாங்கும்போது, சதைப்பகுதி கெட்டியாக இருக்க வேண்டுமாம்.. கைகளால் தொட்டதுமே பொல பொலவென அமுங்க கூடாது.. விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் மீன்களின்மீது, நிறைய ஈக்கள் மொய்த்தாலே அது நல்ல மீன்கள் என்று எடுத்து கொள்ளலாம்.

மருந்துகள்: ஒருவேளை மருந்துகளை மீன்கள் மீது தெளித்து வைத்திருந்தால், மருந்து வாசனைக்கு ஈக்கள் மொய்க்காது.. மீனை தொட்டதுமே, அதன் தோல்கள் உரிந்துவரக்கூடாது.. கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும்.. வெள்ளை கலரில் கண்கள் இருந்தால் வாங்கக் கூடாது.. மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கவேணடும். வெள்ளை கலராக செவுள்கள் இருக்கக்கூடாது.
மீனின் தலைப்பகுதியை கைகளால் தூக்கி பார்த்தால், வால் பகுதி விறைப்பாக இருக்க வேண்டும். மீனின் கழுத்து பகுதியும் விறைப்பாக இருக்க வேண்டும். நிறைய செதில்களுடன் ரெட் கலரில் இருக்க வேண்டும்..
ரசாயனம்: சில இடங்களில், மீன்களின் மீது ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பூசி விற்பார்கள்.. அதாவது, சவக்கிடங்குகளில் மனித உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், துர்நாற்றம் வீசாமல் இருக்கவும்தான் ஃபார்மலினை பயன்படுத்துவார்கள்.
இந்த ஃபார்மலின் ரசாயனத்தைதான், மீன்கள் மீது பூசி வைப்பார்கள்.. இதனால், மீன்கள் கெட்டுப்போய் பல நாள்கள் ஆகியிருந்தாலும் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.
ஒவ்வாமை: ஆனால், ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், ஒவ்வாமை, வாந்தி, தலைச்சுற்றல், சரும நோய்கள் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்... ஃபார்மலின் பூசப்பட்டது மட்டுமல்லாமல், பல நாட்கள், ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனையாகும் மீன்களை சமைத்து சாப்பிட்டாலும், இந்த உடல்நலக்கோளாறுகள் ஏற்படும்..
அதுமட்டுமல்ல, ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை உண்டுவந்தால் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் அதிகமாம். எனவே, அன்றைய தினம் புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் அல்லது அதிகபட்சம் 2 நாள்கள்வரை ஐஸில் வைத்த மீன்களை சாப்பிட்டால் மட்டுமே போதும் என்கிறார்கள்.
எச்சரிக்கை: மீன்களை வாங்கும்போது, ENT டெஸ்ட் செய்து வாங்க வேண்டும் என்கிறார்கள் உணவுத்துறை பாதுகாப்பு துறையினர். அதாவது, E for = கண்களாலேயே மீன்களை அறிந்து கொள்வது.. N for முகர்ந்து அறிதல், T for தொட்டு அறிதல் என்பதுதான் இ.என்.டி. சோதனையின் அடிப்படையாகும்.
பார்த்தவுடனேயே மீன்கள் பளபளப்பாகவும், செதில்களில் சேதம் அடையாமலும், உயிருள்ள மீனுக்கு இருப்பதுபோலவே இருக்க வேண்டுமாம்.. மீனை முகர்ந்து பார்த்தால், நாற்றம் அடிக்ககூடாது.. அதாவது, புதிய மீன்களில் நாற்றம் அடிக்காதாம்.. சுத்தமான தண்ணீரின் வாசம் அல்லது வெள்ளரியின் வாசம் மட்டுமே இருக்கும். மீனை தொட்டு அழுத்தினால் குழிவிழக்கூடாது. இதுபோன்ற மீன்களை வாங்கவும் கூடாது, விற்கவும் கூடாது என்று எச்சரிக்கிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications