Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்னு சுகர் குறையணுமா.. அப்ப இந்த இலை போதுமே.. வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க.. இலைகளின் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவர, பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், விதைகள், பருப்புகள் எத்தனையோ இருக்கின்றன.. இவைகளில் இலைகளின் முக்கியத்துவத்தையும் மறுத்துவிட முடியாது. அந்தவகையில், 2 இலைகளை பற்றி பார்ப்போம்.
இயற்கையாகவே சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த தன்மை கசப்பு நிறைந்த இலைகளுக்கு உள்ளது.. ரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதில் தவிர்க்கவே முடியாதது, முருங்கைக்கீரை, வேப்பிலை, கறிவேப்பிலை, அகத்திக்கீரையாகும்.

காலையில் வெறும் வயிற்றில் நான்கைந்து கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டாலே, உணவில் இருந்து சர்க்கரை உற்பத்தி ஆகும் அளவை குறைக்க உதவுமாம்.. இயற்கையாகவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க இந்த கறிவேப்பிலை உள்ளது. அத்துடன், இதிலுள்ள நார்ச்சத்து நீண்ட காலத்திற்கு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

Do you know the Excellent Health Benefits of Mango Leaves and Amazing 4 Leaves helpful to the Diabetics

வேப்பிலை: நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வேப்பிலைக்கு உள்ளது.. ஒரு லிட்டர் தண்ணீரில், 20 வேப்பிலையை போட்டு, அந்த நீரை பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, இலைகளை வடிகட்டி, சாப்பிடுவதற்கு முன்பு, அரை டம்ளர் மட்டும் குடித்து வந்தாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்குமாம்..

நீரிழிவு நோய்க்கு மா இலைகளைப் பயன்படுத்த எளிதான வழிகள் : 10-15 மா இலைகளை மென்மையாகும் வரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இலைகள் முழுவதுமாக கொதித்த பிறகு அதனை இரவு முழுவதும் குளிர்விக்கவும்.

ரத்த சர்க்கரை: அந்த தண்ணீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த கலவையை சில மாதங்களுக்கு தினமும் காலையில் குடித்து வந்தால், உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மேலும் காலையில் வெறும் வயிற்றில் மா இலைகளை மென்று சாப்பிடுவதும் நல்லது. இருப்பினும், காய்ச்சி வடிகட்டிய நீர் நல்ல பலன்களை கொடுக்க கூடும்.

இதில், மாவிலைகளின் பங்கு அபாரமானது.. மா இலைகளில் பெக்டின், வைட்டமின் C, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது பேருதவி புரிகிறது. இன்சுலின் தொகுப்பு மற்றும் குளுக்கோஸ் விநியோகத்தை அதிகரிக்கும் திறன் இந்த இலைகளில் உள்ளது.. அதனால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது..

15 மாவிலைகளை, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இரவு முழுவதும் அந்த நீரை குளிர்விக்கவும்.. மறுநாள் காலையில் வடிகட்டி, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றம் தெரியும்..

மாவிலைகள்: அந்தவகையில், மற்றொரு முக்கியமான இலைகள் அமிர்தவல்லி எனப்படும் ஆச்சரிய இலைகள்.. கிலோய், குடுச்சி, சீந்தில் கொடி என பலவகையான பெயர்களில் இந்த இலைகளை அழைப்பார்கள்..

இந்த இலையில் டீ போட்டு வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.. அல்லது கறிவேப்பிலை போல, இலைகளை பறித்து கழுவி, மென்று சாப்பிடலாம். இதனால், ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு கட்டுப்படும்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்..

அமிர்தவல்லி: இந்த அமிர்தவல்லி இலையை தூள் செய்து, ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்பளர் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன்பு ஊறவைத்து விடவேண்டும். மறுநாள் காலை எழுந்ததுமே குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.அமிர்தவல்லி இலைகளாக கிடைப்பது அரிது என்றாலும், கேப்சூல்களாக கிடைக்கின்றன. ஆனால், டாக்டர்களின் ஆலோசனைகளை பெற்றே, இதுபோன்ற மூலிகைகளை சாப்பிட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+