சர்னு சுகர் குறையணுமா.. அப்ப இந்த இலை போதுமே.. வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க.. இலைகளின் ஆச்சரியம்
சென்னை: சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவர, பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், விதைகள், பருப்புகள் எத்தனையோ இருக்கின்றன.. இவைகளில் இலைகளின் முக்கியத்துவத்தையும் மறுத்துவிட முடியாது. அந்தவகையில், 2 இலைகளை பற்றி பார்ப்போம்.
இயற்கையாகவே சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த தன்மை கசப்பு நிறைந்த இலைகளுக்கு உள்ளது.. ரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதில் தவிர்க்கவே முடியாதது, முருங்கைக்கீரை, வேப்பிலை, கறிவேப்பிலை, அகத்திக்கீரையாகும்.
காலையில் வெறும் வயிற்றில் நான்கைந்து கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டாலே, உணவில் இருந்து சர்க்கரை உற்பத்தி ஆகும் அளவை குறைக்க உதவுமாம்.. இயற்கையாகவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க இந்த கறிவேப்பிலை உள்ளது. அத்துடன், இதிலுள்ள நார்ச்சத்து நீண்ட காலத்திற்கு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

வேப்பிலை: நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வேப்பிலைக்கு உள்ளது.. ஒரு லிட்டர் தண்ணீரில், 20 வேப்பிலையை போட்டு, அந்த நீரை பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, இலைகளை வடிகட்டி, சாப்பிடுவதற்கு முன்பு, அரை டம்ளர் மட்டும் குடித்து வந்தாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்குமாம்..
நீரிழிவு நோய்க்கு மா இலைகளைப் பயன்படுத்த எளிதான வழிகள் : 10-15 மா இலைகளை மென்மையாகும் வரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இலைகள் முழுவதுமாக கொதித்த பிறகு அதனை இரவு முழுவதும் குளிர்விக்கவும்.
ரத்த சர்க்கரை: அந்த தண்ணீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த கலவையை சில மாதங்களுக்கு தினமும் காலையில் குடித்து வந்தால், உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மேலும் காலையில் வெறும் வயிற்றில் மா இலைகளை மென்று சாப்பிடுவதும் நல்லது. இருப்பினும், காய்ச்சி வடிகட்டிய நீர் நல்ல பலன்களை கொடுக்க கூடும்.
இதில், மாவிலைகளின் பங்கு அபாரமானது.. மா இலைகளில் பெக்டின், வைட்டமின் C, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது பேருதவி புரிகிறது. இன்சுலின் தொகுப்பு மற்றும் குளுக்கோஸ் விநியோகத்தை அதிகரிக்கும் திறன் இந்த இலைகளில் உள்ளது.. அதனால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது..
15 மாவிலைகளை, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இரவு முழுவதும் அந்த நீரை குளிர்விக்கவும்.. மறுநாள் காலையில் வடிகட்டி, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றம் தெரியும்..
மாவிலைகள்: அந்தவகையில், மற்றொரு முக்கியமான இலைகள் அமிர்தவல்லி எனப்படும் ஆச்சரிய இலைகள்.. கிலோய், குடுச்சி, சீந்தில் கொடி என பலவகையான பெயர்களில் இந்த இலைகளை அழைப்பார்கள்..
இந்த இலையில் டீ போட்டு வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.. அல்லது கறிவேப்பிலை போல, இலைகளை பறித்து கழுவி, மென்று சாப்பிடலாம். இதனால், ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு கட்டுப்படும்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்..
அமிர்தவல்லி: இந்த அமிர்தவல்லி இலையை தூள் செய்து, ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்பளர் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன்பு ஊறவைத்து விடவேண்டும். மறுநாள் காலை எழுந்ததுமே குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.அமிர்தவல்லி இலைகளாக கிடைப்பது அரிது என்றாலும், கேப்சூல்களாக கிடைக்கின்றன. ஆனால், டாக்டர்களின் ஆலோசனைகளை பெற்றே, இதுபோன்ற மூலிகைகளை சாப்பிட வேண்டும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications