சர்க்கரை நோயாளிகள்.. இந்த பருப்பை சாப்பிடலாமா? அடடே இது தெரியாம போச்சே.. நீரிழிவு நோயாளிகள் கவனிங்க
சென்னை: சர்க்கரை நோயாளிகள் பருப்பு வகைகள் சாப்பிடலாமா? அதிலும் பாதாம் பருப்பை சாப்பிடலாமா? என்பதில் சந்தேகம் நிலவியபடியே உள்ளது.
பாதாம் பருப்புகள் ருசியானவை.. அதிக சத்துக்களை உடையவை.. உடல் எடை குறைய வேண்டும் என்றால், அதற்கு இந்த பாதாம் துணைபுரியும்.. அதிலும் ஊறவைத்து இந்த பருப்பை சாப்பிட்டால், நன்மைகள் பலமடங்கு பெருகும்.

உடல் எடை: தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினையும் தீரும்.. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதில் பாதாம் உதவுகிறது. காரணம், இந்த பாதாமில் கால்சியமும், புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்களும் நிரம்பி உள்ளன. பாதாமை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்கள் நம்மை எளிதில் தாக்காது.
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இதய கோளாறுகள், சருமக் கோளாறுகள், தலைமுடி பிரச்சினைகள், ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, இப்படி இன்னும் ஏராளமான பிரச்சனைகளை இந்த பாதாம் பருப்பு சரிசெய்ய துணை புரிகிறது. இவைகள் எல்லாம் பொதுப்பலன் என்றாலும், உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கினை இந்த பருப்பு வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகள் முந்திரியை எடுத்து கொள்ளலாம்.
மக்னீசியம்: காரணம், பாதாமில் உள்ள சத்துக்களிலேயே அதிகமானது மக்னீசியம்.. இந்த மக்னீசியம் போதுமான அளவு இருந்தால்தான், டைப் 2 டயப்பட்டீஸ் தொந்தரவு வராமல் தவிர்க்க முடியும். அந்தவகையில், முந்திரி பருப்புகள் பயன்படுகிறது. மேலும், பாதாம் சாப்பிட்டால், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும் என்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்திவிடுமாம். முந்திரியில் நிறைய நார்ச்சத்து இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பையும் தடுத்து நிறுத்துகிறது..
அதனால், உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, பாதாம் பருப்பை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயையும் தடுக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.. அந்தவகையில், தினமும் 30 கிராம் பாதாம் பருப்பை மட்டுமே சாப்பிட்டு வரலாம்.
சர்க்கரை நோயாளிகள்: முந்திரியை போலவே, சர்க்கரை நோயாளிகளுக்கு, கடலை பருப்பு மிகவும் நல்லது என்கிறார்கள்.. அதேபோல, பொட்டுக்கடலை, பாசிப்பயறு, தோல் நீக்காத உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை போன்றவைகளை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியவை. அதைவிட முக்கியமாக, இந்த பாதாமில் குறைவான கலோரி உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் தினமும் 5 பாதாம் பருப்பை சாப்பிடலாம் என்கிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications