வாழை இலை சாறு.. வாழ வைக்கும் வாழை இலை.. கருகரு தலைமுடி வேணுமா? பளபள சருமம் வேணுமா? வாழையிலை இருக்கே
சென்னை: வாழையிலையின் பயன்களில் மிக முக்கியமானது, சருமத்துக்கு தரும் நன்மைகள்தான்.. சரும பாதுகாப்புக்கு வாழை எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா?
வாழையிலை குளியல் என்றே, ஆயுர்வேதத்தில் சிகிச்சை முறை உள்ளது.. வாழையிலை குளியல் எடுத்து கொள்வதால், உடம்பிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கும் என்பதுடன், உடல் எடையும் வெகுவாக குறையும்.. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும், சிறுநீரக செயலிழப்பை தடுக்கவும், இந்த குளியல் சிகிச்சை தரப்படுகிறது.

சரும பாதுகாப்பு: அதேபோல, சரும பாதுகாப்பை இந்த வாழையிலைகள் உறுதிசெய்கின்றன.. காரணம், குளிர்ச்சி மிகுதி இலை என்பதுடன், இயற்கையான ஆன்டிபயாடிக் நிறைந்த இலையுமாகும்..
வாழையிலை சாறு, சூரியக் கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக்க கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. அதனால்தான், பெரும்பான்மையான சன் ஸ்கிரீன் லோஷன்களில், இந்த வாழை இலையின் சாற்றினை முக்கிய பொருளாக சேர்க்கிறார்கள்..
இதனால், சருமத்துக்கு அலர்ஜி தொல்லை ஏற்படுத்ததாது.. கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. வேனல் கட்டிகள், காயங்கள், சொறி, சிரங்கு, தீப்புண்கள், எரிச்சல், அரிப்பு, போன்ற சரும பிரச்சனைகளுக்கு, வாழையிலையை அரைத்து பூசினாலே நிவாரணம் கிடைக்கும்.. வேர்க்குரு தொந்தரவும் முகத்துக்கு வராது. முகத்தில் ஏற்படும் முதிர்ச்சி தோற்றத்தை தள்ளிப்போடுகிறது இந்த சாறு.

சாறுகள்: வாழையிலையில் அலட்டாயின் என்ற சத்துதான், சருமத்துக்கு பாதுகாப்பை தருகிறது. நேரடியாக இந்த சாற்றினை தடவாமல், ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் கலந்து சேர்த்து பயன்படுத்த வேண்டும். அல்லது தயிருடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
அல்லது ஐஸ் கட்டிகளை வாழை இலையில் வைத்து மசாஜ் செய்தால் போதும் மிருதுவான மற்றும் அழகான சருமத்தை பெற முடியும்.. அல்லது வாழையிலையில் சாறு எடுத்து, அதை வடிகட்டி ஃப்ரிட்ஜில் ஐஸ்கட்டியாகும்வரை வைத்துவிட வேண்டும். இந்த அந்த ஐஸ் கட்டிகளை சருமத்தில் தேய்த்து வந்தாலே, சருமம் மென்மையடையும்.. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முக சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன..












Click it and Unblock the Notifications