இட்லி, தோசை மாவு புளித்து விட்டால் தூக்கி கொட்டிடாதீங்க! எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க!
சென்னை: இட்லி மாவோ தோசை மாவோ புளித்துவிட்டதா? அப்படியென்றால் அதை தூக்கி எறியாதீர்கள். அதை வைத்து என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். எந்த உணவு பொருளையும் அது கெட்டு போகாதவரை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்.
வாராவாரம் எல்லோர் வீட்டிலும் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பார்கள். பொதுவாக வார நாட்களில் இட்லி, தோசைதான் பெரும்பாலானோர் வீட்டில் சிற்றுண்டியாக உள்ளது.

இட்லி, தோசை ஆகிய இரண்டுமே லேசான உணவுகள் என்பதால் பெரும்பாலானோருக்கு இது செட் ஆகிறது. இட்லியை ஆவியில் வைப்பதால் இது உடலுக்கு நன்மையை தருகிறது. குழந்தைகள், காய்ச்சல் வந்தவர்கள், ஜீரண கோளாறு இருப்போர் தோசையை காட்டிலும் இட்லியை சாப்பிடலாம்.
அப்படி வாரந்தோறும் இட்லி மாவு அரைத்து என்னதான் பிரிட்ஜில் வைத்தாலும் அது சில நாட்கள் கழித்து புளித்த வாடை அடிக்கிறது. இதனால் பலர் அதில் வெங்காயத்தை வதக்கி போட்டு ஆனியன் தோசை செய்வார்கள். இன்னும் சிலர் வெங்காயம், கேரட் துருவல், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, அரிசிமாவு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுவார்கள்.
எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை அதிகம் விரும்பாதோர் மாவு புளித்துவிட்டால் அதை கீழே கொட்டி விடுகிறார்கள். அப்படி செய்யக் கூடாது. உணவை எந்த காலத்திலும் வீணடிக்கவே கூடாது. அந்த புளித்த மாவை வைத்து என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஒன்று புளித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செடிகளுக்கு கரைத்து ஊற்றிவிடலாம். இல்லாவிட்டால் மாடு இருக்கும் பகுதிகளில் இருந்தால் மாட்டுக்கு அந்த மாவை கொடுத்துவிட்டால், அவர்கள் கழிநீர் தண்ணீரில் கலந்து கொடுப்பார்கள். இதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கிளீனிங் பர்போஸ்!
மாவில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஃபேகாலிஸ், லாக்டோபேசிலஸ் பெர்மென்டம் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் இருப்பதால்தான் அந்த மாவில் நொதித்தல் நடந்து புளித்துவிடுகிறது. இந்த புளித்த மாவில் அமில தன்மையும் அதிகமாக இருக்கும். எனவே எண்ணெய் பிசுக்குள்ள எண்ணெய் பாத்திரங்கள், டைல்ஸ்கள், கிச்சன் மேடைகள், உள்ளிட்டவைகளை சுத்தப்படுத்தலாம்.
அது போல் ஸ்டீல் குழாய்களில் படிந்திருக்கும் உப்பு கறையை நீக்கலாம். மேலும் பாத்ரூம்களில் தரையை சுத்தப்படுத்தலாம். எண்ணெய் பிசுக்குள்ள அடுப்பு, ஸ்டீல் சிங்க் உள்ளிட்டவைகளை கழுவி பயன்படுத்திக் கொள்ளலாம், அது போல் பாத்திரம் கழுவதற்கும் சிலர் இதை பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த மாவை முகத்திற்கு பேஸ் ஸ்க்ரப் போல் தேய்த்துவிட்டு முகத்தை கழுவினால் முகம் பொலிவடையும். எனவே இனி புளித்த மாவை வேஸ்ட் செய்யாதீர்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications