இட்லி, தோசை மாவு புளித்து விட்டால் தூக்கி கொட்டிடாதீங்க! எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க!
சென்னை: இட்லி மாவோ தோசை மாவோ புளித்துவிட்டதா? அப்படியென்றால் அதை தூக்கி எறியாதீர்கள். அதை வைத்து என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். எந்த உணவு பொருளையும் அது கெட்டு போகாதவரை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்.
வாராவாரம் எல்லோர் வீட்டிலும் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பார்கள். பொதுவாக வார நாட்களில் இட்லி, தோசைதான் பெரும்பாலானோர் வீட்டில் சிற்றுண்டியாக உள்ளது.

இட்லி, தோசை ஆகிய இரண்டுமே லேசான உணவுகள் என்பதால் பெரும்பாலானோருக்கு இது செட் ஆகிறது. இட்லியை ஆவியில் வைப்பதால் இது உடலுக்கு நன்மையை தருகிறது. குழந்தைகள், காய்ச்சல் வந்தவர்கள், ஜீரண கோளாறு இருப்போர் தோசையை காட்டிலும் இட்லியை சாப்பிடலாம்.
அப்படி வாரந்தோறும் இட்லி மாவு அரைத்து என்னதான் பிரிட்ஜில் வைத்தாலும் அது சில நாட்கள் கழித்து புளித்த வாடை அடிக்கிறது. இதனால் பலர் அதில் வெங்காயத்தை வதக்கி போட்டு ஆனியன் தோசை செய்வார்கள். இன்னும் சிலர் வெங்காயம், கேரட் துருவல், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, அரிசிமாவு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுவார்கள்.
எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை அதிகம் விரும்பாதோர் மாவு புளித்துவிட்டால் அதை கீழே கொட்டி விடுகிறார்கள். அப்படி செய்யக் கூடாது. உணவை எந்த காலத்திலும் வீணடிக்கவே கூடாது. அந்த புளித்த மாவை வைத்து என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஒன்று புளித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செடிகளுக்கு கரைத்து ஊற்றிவிடலாம். இல்லாவிட்டால் மாடு இருக்கும் பகுதிகளில் இருந்தால் மாட்டுக்கு அந்த மாவை கொடுத்துவிட்டால், அவர்கள் கழிநீர் தண்ணீரில் கலந்து கொடுப்பார்கள். இதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கிளீனிங் பர்போஸ்!
மாவில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஃபேகாலிஸ், லாக்டோபேசிலஸ் பெர்மென்டம் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் இருப்பதால்தான் அந்த மாவில் நொதித்தல் நடந்து புளித்துவிடுகிறது. இந்த புளித்த மாவில் அமில தன்மையும் அதிகமாக இருக்கும். எனவே எண்ணெய் பிசுக்குள்ள எண்ணெய் பாத்திரங்கள், டைல்ஸ்கள், கிச்சன் மேடைகள், உள்ளிட்டவைகளை சுத்தப்படுத்தலாம்.
அது போல் ஸ்டீல் குழாய்களில் படிந்திருக்கும் உப்பு கறையை நீக்கலாம். மேலும் பாத்ரூம்களில் தரையை சுத்தப்படுத்தலாம். எண்ணெய் பிசுக்குள்ள அடுப்பு, ஸ்டீல் சிங்க் உள்ளிட்டவைகளை கழுவி பயன்படுத்திக் கொள்ளலாம், அது போல் பாத்திரம் கழுவதற்கும் சிலர் இதை பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த மாவை முகத்திற்கு பேஸ் ஸ்க்ரப் போல் தேய்த்துவிட்டு முகத்தை கழுவினால் முகம் பொலிவடையும். எனவே இனி புளித்த மாவை வேஸ்ட் செய்யாதீர்கள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications