இனிக்கும் இல்லறத்துக்கு செண்பகப் பூ.. சிறுநீரகம், நரம்பு, ஆரோக்கியம் காக்கும் செண்பக பூக்கள் கஷாயம்
சென்னை: செண்பக மரங்களை பொறுத்தவரை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை.. இந்த செண்பக மரத்தின் விதை, வேர், பட்டை போன்றவற்றின் மருத்துவ குணங்கள் என்னென்ன? இதனை யார் யார் பயன்படுத்தலாம்? இதன் முக்கியத்துவங்கள் என்னென்ன? என்பது குறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.செண்பக மரங்களின் இலைகள் நீளமாக, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டியும் காணப்படும். இவைகளை கொண்டுதான் காற்றிலுள்ள தூசுகள் அகற்றப்படுகின்றன.

மரத்தின் முக்கியத்துவம்
அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக், பால்மிடிக் போன்றவையே, இந்த செண்பக மரத்தின் முக்கியம்சம் ஆகும். செண்பக மரத்தின் விதைகள், வேர்கள், பட்டைகளிலும், வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக், பால்மிடிக் உட்பட பல பொருட்கள் நிறைந்துள்ளன. குளிர்ச்சியான செண்பக பூக்கள், நம்முடைய கண்களுக்கு மருந்தாகிறது..
கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல், தொற்றுகள் என கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை நீக்க இந்த பூக்கள் போன்ற கண்களை பாதிக்கும் அத்தனை பிரச்சனைக்கும் இப்பூக்கள் பயன்படுகின்றன. அதனால்தான், கண்நோய் மருந்துகளை தயாரிக்க செண்பக பூக்கள் மூலப்பொருட்களாக உபயோகப்படுத்துகிறார்கள்.
கண்கள் பாதுகாப்பு
அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ இவைகளுடன் செண்பக பூக்களையும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கண்களின் மீது பற்று போல போடலாம். 1 மணி நேரத்தில் குளிர்ந்த நீரில் கண்ணை கழுவலாம். அல்லது வெறுமனே இந்த பூக்களை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து, அந்நீரில் கண்ணை கழுவலாம்.
நுண்கிருமிகள் இருந்தாலும் வெளியேற்ற இந்த பூக்கள் போதும். ஏனென்றால், பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின் போன்றவையே கிருமிநாசினியாக பயன்படுகின்றன. வைரஸ், பாக்டீரியாக்களால் உண்டாகும் ஜூரத்தையும் இப்பூக்கள் விரட்டுகின்றன.
உஷ்ண கோளாறுகள்
செண்பக பூக்களை விழுதாக அரைத்து, நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி, ஆறவைத்து எடுத்து கொள்ள வேண்டும். உடம்பில் வலி, எரிச்சல், எரிச்சல், மூட்டு வலி, முழங்கால் வலி, தலைவலிக்கு இதனை தேய்க்கலாம். உஷ்ண கோளாறுகள் அதாவது, சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சலையும், ஆண்மை குறைவு பிரச்சனையையும், நரம்பு தளர்ச்சி குறைபாட்டை சரிசெய்கிறது.
செண்பக பூக்கள்
இந்த பூவை கஷாயம் வைத்து பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்வு விலகும்.. பித்தம், வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் இருந்தால், செண்பக பூ கஷாயம் போதும். ஆண்மை குறைபாட்டையும் தீர்க்க செண்பக பூக்கள் பயன்படுகின்றன. எனவே, வெறுமனே இந்த பூக்களை வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம். நிழலில் உலர்த்தி, தூள் போல தயாரித்து தேன் சேர்த்தும் சாப்பிடலாம். இது உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு மிகவும் நல்லது.
பாலியல் நோய் தாக்கம் உள்ளவர்கள் செண்பகப் பூவை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும். ஆழ்ந்த தூக்கத்திற்கும், வெள்ளைப்போக்கு பிரச்சனைகளை சரிசெய்யவும் இந்த செண்பக பூக்களே மருந்தாகின்றன
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications