புனேயில் வருங்கால கணவரை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண்.. இன்ஸ்டாவில் உருக்கம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 26 வயதாகும் ரியல் எஸ்டேட் அதிபர், மலையேற்றம் சென்றுள்ளார். அவர் அப்போது 400 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ரியல் எஸ்டேட் அதிபருடன் சென்ற அவர் தனது வருங்கால மனைவி மற்றும் அந்த பெண்ணின் காதலனால் கீழே தள்ளிவிடப்பட்டது அம்பலமாகி உள்ளது. ஆனால் இன்ஸ்டாவில் எங்கே சென்றாய் அன்பே என்கிற ரீதியில் அவரது வருங்கால மனைவி ஸ்டோரி எல்லாம் வைத்துள்ளார். அப்படி இருந்தும் சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த 26 வயதாகும் கேதன் விஷால் அகர்வால், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குனராக உள்ள கேதன் விஷால் அகர்வாலுக்கும், சியா கோயல் என்ற பெண்ணுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு வருகிற நவம்பர் மாதம் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் சியா கோயல் தனது பிறந்தநாளை கொண்டாட வித்தியாசானமான இடத்தை தேர்வு செய்தார். புனே மாவட்டம் லோனாவாலா பகுதியில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற லோகாகாட் கோட்டை மலைப்பகுதிக்கு தனது வருங்கால கணவர் கேதன் விஷாலை அழைத்து சென்றார். இருவரும் கடந்த 18-ந்தேதி கேதன் விஷால் அங்கு சென்றார். அங்கு அவர்கள் கரம் கோர்த்து ஜோடியாக மலையேற்றம் சென்றனர். பின்னர் இந்த ஜோடியுடன் நண்பர் ஒருவரும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்.
அவர்கள் மலையின் செங்குத்தான பாறையில் நின்று புகைப்படம் எடுத்தனர். இதில் கேதன் விஷால் நிலை தடுமாறி 400 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். வருங்கால மனைவி கண்முன்னே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இதுகுறித்து விபத்து வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இருப்பினும் விசாரணையின்போது சியா கோயலின் வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது. இதனால் போலீசாரும் தங்களது விசாரணையை மாற்றினார்கள்.

அப்போது சியா கோயல், சேத்தன் சவுத்ரி(22) என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த வாலிபரை தங்களது காவலில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சியா கோயலும், காதலன் சேத்தன் சவுத்ரியும் சேர்ந்து கேதன் விஷாலை மலையில் இருந்து கீழே தள்ளி கொன்றது தெரியவந்தது.
சியா கோயலுக்கு கேதன் விஷாலை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. இதனால் அவர் தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதினார். எனவே காதலர்கள் இருவரும் சதித்திட்டம் தீட்டி, வருங்கால கணவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சியா கோயல் மற்றும் அவரது காதலனை கைது செய்துள்ளனர்.
இதனிடையே இன்ஸ்டாவில் சியோ கோயல் வெளியிட்ட பதிவில், "என் பிறந்தநாளன்றே நீ என்னை விட்டுப் போய்விட்டாய். நம் திருமணம் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தபோது நீ சென்றுவிட்டாய். ஏன் எனக்கு இப்படி செய்தாய் என்று என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு கனவுகள் இருந்தன, பதில்களே கிடைக்காத கேள்விகள் இருந்தன. நான் உன்னை இவ்வளவு நேசித்தபோது ஏன் என்னை விட்டுச் சென்றாய்? உன் ஆன்மா சாந்தியடையட்டும்," என்று கூறியிருந்தார். வருங்கால கணவரை தள்ளிவிட்டு கொன்றுவிட்டு, இன்ஸடாவில் ஸ்டோரியும் வைத்தவர், முன்னுக்கு பின் முரணாக அளித்த வாக்குமூலத்தால் சிக்கியுள்ளார்.














Click it and Unblock the Notifications