ஆசனவாய் பகுதியில் அரிப்பு ஏற்படுகிறதா? அசால்ட்டா எடுத்துகாதீங்க! பின்விளைவுகள் அதிகமாகும்
சென்னை: ஆசனவாய் பகுதியில் அரிப்பு ஏற்படுகிறதா, இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை மாற்றத்தால் மனிதனுக்கு சாப்பிடுவது முதல் மலம் கழித்தல் வரை அனைத்திலுமே பிரச்சினைதான். ஒன்று சரியாக சாப்பிட முடியாமல் வயிறு உப்புசமாக இருத்தல், ஜீரணமாகாமல் இருத்தல் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படுகிறது.
இல்லாவிட்டால் போனா போயிகிட்டே இருக்கு. இல்லாட்டி முக்கினாலும் கூட ஆட்டுப்புழுக்கைதான் வருகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் வாழ்க்கை முறைதான். அவ்வாறு பெரும்பாலானோருக்கு உடல் உபாதைகள் ஏற்படும் போது பொதுவாக பலருக்கும் ஏற்படுவது என்ன தெரியுமா.
ஆசனவாய் பகுதியில் எரிச்சல் அல்லது நமிச்சல் ஏற்படுகிறது. அதுவும் பொது இடங்களில் அரிப்பு ஏற்பட்டால் நெளிந்தபடியே பாத்ரூமை தேடி ஓடும் நிலை ஏற்படுகிறது. இதனால் அனைவருக்கும் சங்கடம் ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஆசனவாய் பகுதியில் ஏற்படும் அரிப்பிற்கு ப்ரூரிடஸ் அனி என அழைக்கிறார்கள். ஒரு சில காரணங்களால் இது ஏற்படுகிறது. குறிப்பாக மூலம், வயிற்றுபோக்கு, நோய் தொற்றுகள் இருந்தால் ஆசனவாய் பகுதியில் எரிச்சலை கொடுக்கும். இந்த தொற்று தீவிரமாவதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆசனவாய் பகுதியில் தீவிரமான அரிப்பு இருக்கும்.
வீக்கம், எரிச்சல் ஆகியவை இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த அறிகுறிகளின் அர்த்தம். மேலும் அந்த பகுதியில் புண் ஏற்பட்டிருந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். ஆசனவாய் பகுதியில் அரிப்பு என்பது அதிக வெப்பம், அதிக ஈரப்பதமான காலநிலையில் ஏற்படும்.
வயிற்றுப்போக்கு, சுகாதாரமற்ற கழிப்பிடம், ரசாயன பொருட்களை பயன்படுத்துதல், உள்ளாடைகளுக்கு உபயோகப்படுத்தும் சோப்பின் தரம் ஆகியவற்றால் ஏற்படலாம். உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும், ஆசனவாய் பகுதியை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். உடலுறவு மூலமும் தொற்றுகள் பரவுவதால் அரிப்பு ஏற்படலாம். எனவே குழந்தை பேறுக்கு முயற்சிக்காத போது உடலுறவுக்கு பிறகு அந்தரங்க உறுப்பையும் ஆசனவாய் பகுதியையும் தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும்.
அது போல் மலம் கழிக்கும் போது ரத்தம் வந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நாளாக நாளாக மலம் கட்டிக் கொண்டு சிரமப்பட்டு போக வேண்டிய நிலை இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. சுய மருத்துவம் எதையும் செய்யக் கூடாது. அதே வேளையில் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications