Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனுடன் கலந்த ரகசியம்.. கருவாடு சமாச்சாரம் வேற இருக்கு.. இதெல்லாம் நோட் பண்ணுங்க.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நலன் கருதி பல்வேறு விதிமுறைகளை நம் முன்னோர்கள் விதித்திருக்கிறார்கள்.. அறிவியல் பூர்வமாக எதையும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், எந்த உணவுடன், எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள்..

உணவு தொடர்பான கட்டுக்கதைகளை தவிர்த்துவிட்டு, அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும்வகையில், உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மருத்துவர்களிடம் கேட்டும் அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

உணவுகள்: பாலில் இருந்து பெறப்படும் தயிரில் வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி12, பொட்டாசியம், கால்ஷியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன... இந்த சத்துக்கள் குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது, தொந்தரவுகளை தந்துவிடும் என்கிறார்கள்.. அதுவும், அசைவ உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது நிறைய உபாதைகள் வந்துவிடும் என்பதால்தான், அவைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.

தயிர்: தயிர் + மீன் இவைகளையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு உண்டு... அப்படிப்பட்ட தயிரை, சத்து அதிகமான மீனுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் மேலும் மந்தமடையும்.. இதனால் சத்துக்கள் எதுவும் நமக்கு முழுமையாக கிடைக்காமலேயே போய்விடும்.. மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிட்டால், மொத்த சத்துக்களும் நமக்கு வீணாகாமல் கிடைக்குமாம்.

Health useful tips and which food with up to any food do not eat let us know what

தயிர் + கீரையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. சிலர் தயிர் + கருவாடு சேர்த்து சாப்பிடுவார்கள்.. இதனால் செரிமான கோளாறு ஏற்படும்.. தயிரும் மீனும், அல்லது தயிரும் கருவாடும் என சேர்த்து சாப்பிடுவதால், செரிமான கோளளாறு ஏற்படும் என்பதே உண்மை.. மற்ற கட்டுக்கதைகள் எதுவும் இல்லை என்கிறார்கள்.

அஜீரணம்: மாம்பழம் + தயிரும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள். இதற்கு காரணம், மாம்பழம் உடலுக்கு சூடு.. தயிருடன் சேர்த்து சாப்பிடும்போது, செரிமான பிரச்சனை வரலாம்.. எப்பவாவது சாப்பிட்டால் பரவாயில்லை.. தினமும் சாப்பிட்டால்தான் நிச்சயம் அஜீரணம் ஏற்படும்..

மீன் + முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அப்படி சாப்பிட்டால், சளி, மலசிக்கல் போன்ற உடல் உபாதைகள் உண்டாக சில வாய்ப்புகள் உண்டு... நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால், அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம். தேன் சாப்பிட்ட பிறகு இனிப்பு சார்ந்த உணவுகளோ சாப்பிடக் கூடாது... வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது... கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

கருவாடு: மீன், கருவாடு சாப்பிட்டதுமே, பால், தயிர் சாப்பிட்டால், "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.. உணவுப்பொருட்களை வைத்து சில கட்டுக்கதைகள் திணிக்கப்பட்டாலும், அவைகள் உடலுக்கு எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணும் என்பதே பிரதான காரணம். அல்லது சத்துக்கண் வீணாகிவிடும். இதையே தனித்தனியாக சாப்பிட்டால், சத்துக்கள் 2 மடங்காக நமக்கு கிடைக்கும்.

உதாரணமாக, பழங்களை நாம் எப்போது சாப்பிட்டாலும், தனியேதான் சாப்பிட வேண்டும்.. சாப்பாட்டுடன் கலந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும். ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்கள் கொண்ட 2 உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அதை சாப்பிடக்கூடாது.. தேன் + நெய்யை எடுத்துக் கொண்டால், எதிரெதிர் உணவுப்பொருட்கள்தான்..

என்ன காரணம்: பிரியாணிக்கு வைக்கப்படும் தயிர் வெங்காயமும் கூட தவறுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.. காரணம், தயிர் குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தருமாம்.. அதேபோல, மட்டன், சிக்கன் பிரியாணி செய்யும்போது, அதிலும் தயிரை சேர்த்து சமைக்கக்கூடாது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+