மூளையை தின்னும் "அமீபா" தேங்கியிருக்கும் நீரில் குளிக்க கூடாது.. மக்கள் நல்வாழ்வுத்துறை அட்வைஸ்
சென்னை: அமீபிக் மெனிங்கோ என் செபாலிடிஸ் என்ற மூளையை தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கேரளாவில் 3 பேர் இந்த அமீபா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது. அது குறித்து இங்கே பார்க்கலாம்.
கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய வகை மூளை நோயால் மூன்றாவது மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த அரிய வகை நோய் குழந்தைகளை தாக்கவே வாய்ப்புகள் அதிகம். இதனால் குழந்தைகளை பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார்.

குறிப்பாக அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்குள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார். அசுத்தமான நீரில் தான் இந்த அமீபா எளிதாக வளரும். எனவே, இந்த நோய் பரவுவதைத் தடுக்க நீச்சல் குளங்களை நன்கு குளோரினேட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். உடலுக்கு நுழைந்தவுடன் இது முதலில் குறிவைப்பது மூளையை தான்.. நமது உடலில் உள்ள திசுக்களை உணவாக சாப்பிட்டே இது வளர்கிறது.. இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். நோய் பாதிப்பு அதிகரிக்கும் போது குழப்பம், வலிப்பு, கோமா மற்றும் போன்ற சீரிஸயான பாதிப்புகளும் கூட ஏற்படும்.

நோய் பாதிப்பு ஏற்பட்ட 1 முதல் 12 நாட்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட தொடங்கும்.. சட்டென இதன் தீவிரம் அதிகரிக்கும் நிலையில், 5 - 18 நாட்களில் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம். இது கொரோனா போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால் நாம் கவலைப்பட தேவையில்லை. அமீபா இருக்கும் அசுத்தமான நன்னீரில் குளிக்கும் போது மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா! 3ஆவது உயிரிழப்பு.. இது எப்படி பரவும்! தமிழகத்திற்கு ஹை அலர்ட் தேவையா
மற்றபடி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதில்லை. கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவிற்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கீழ்க்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்து மாநகராட்சி சுகாதார அலுவலர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுதியுள்ளது.
* தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* நீர் நிலைகள், குளங்கள் ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.
* தனியார், உள்ளாட்சி அமைப்புகளின் நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
19 வருட காத்திருப்பு.. உயிருக்கு போராடும் குழந்தை.. ரூ.3 லட்சம் திரட்ட முடியாமல் தவிக்கும் பெற்றோர் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications