மூளையை தின்னும் "அமீபா" தேங்கியிருக்கும் நீரில் குளிக்க கூடாது.. மக்கள் நல்வாழ்வுத்துறை அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமீபிக் மெனிங்கோ என் செபாலிடிஸ் என்ற மூளையை தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கேரளாவில் 3 பேர் இந்த அமீபா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது. அது குறித்து இங்கே பார்க்கலாம்.

கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய வகை மூளை நோயால் மூன்றாவது மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த அரிய வகை நோய் குழந்தைகளை தாக்கவே வாய்ப்புகள் அதிகம். இதனால் குழந்தைகளை பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார்.

amoeba tamil nadu health


குறிப்பாக அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்குள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார். அசுத்தமான நீரில் தான் இந்த அமீபா எளிதாக வளரும். எனவே, இந்த நோய் பரவுவதைத் தடுக்க நீச்சல் குளங்களை நன்கு குளோரினேட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். உடலுக்கு நுழைந்தவுடன் இது முதலில் குறிவைப்பது மூளையை தான்.. நமது உடலில் உள்ள திசுக்களை உணவாக சாப்பிட்டே இது வளர்கிறது.. இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். நோய் பாதிப்பு அதிகரிக்கும் போது குழப்பம், வலிப்பு, கோமா மற்றும் போன்ற சீரிஸயான பாதிப்புகளும் கூட ஏற்படும்.

amoeba tamil nadu health


நோய் பாதிப்பு ஏற்பட்ட 1 முதல் 12 நாட்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட தொடங்கும்.. சட்டென இதன் தீவிரம் அதிகரிக்கும் நிலையில், 5 - 18 நாட்களில் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம். இது கொரோனா போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால் நாம் கவலைப்பட தேவையில்லை. அமீபா இருக்கும் அசுத்தமான நன்னீரில் குளிக்கும் போது மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா! 3ஆவது உயிரிழப்பு.. இது எப்படி பரவும்! தமிழகத்திற்கு ஹை அலர்ட் தேவையா


மற்றபடி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதில்லை. கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவிற்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கீழ்க்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்து மாநகராட்சி சுகாதார அலுவலர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுதியுள்ளது.

* தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* நீர் நிலைகள், குளங்கள் ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.
* தனியார், உள்ளாட்சி அமைப்புகளின் நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+