Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா! 3ஆவது உயிரிழப்பு.. இது எப்படி பரவும்! தமிழகத்திற்கு ஹை அலர்ட் தேவையா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய வகை நோயால் மூன்றாவது மரணம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், சில முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கேரளாவில் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளதால், தமிழக மக்களும் அச்சத்தில் உள்ளனர். இது மக்களிடையே எப்படி பரவும் முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த காலத்தில் பல வகையான பாதிப்புகள் திடீர் திடீரென ஏற்படுகிறது. அவை சில நேரங்களில் மோசமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. அப்படி தான் ஒரு வகை அமீபா பாதிப்பு இப்போது பகீர் கிளப்பி வருகிறது.

kerala tamil nadu health

நமது அண்டை மாநிலமான கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய வகை மூளை நோயால் மூன்றாவது மரணம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மூளையை உண்ணும் அமீபா: இந்த அரிய வகை நோய் குழந்தைகளை தாக்கவே வாய்ப்புகள் அதிகம். இதனால் குழந்தைகளை பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.. குறிப்பாக அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்குள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார்.

அசுத்தமான நீரில் சான் இந்த மூளையை நேரடியாக பாதிக்கும் அமீபா எளிதாக வளரும். எனவே, இந்த நோய் பரவுவதைத் தடுக்க நீச்சல் குளங்களை நன்கு குளோரினேட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கலந்து கொண்டு, நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை விளக்கியுள்ளார்.

மூன்றாவது மரணம்: கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் இந்த மூளையை உண்ணும் அமீபா மூன்றாவது மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கு முன்பு கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இரண்டு பேர் இந்த அமீபா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இப்போது கோழிக்கோடு பகுதியில் 3வது மரணம் ஏற்பட்டுள்ளது.

கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 14 வயதான மிருதுல் என்ற சிறுவன் ஜூன் 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனில்லாமல் அந்த சிறுவன் சமீபத்தில் உயிரிழந்தான். மூளையை உண்ணும் அமீபா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அது பலன் தரவில்லை என்றே கூறப்படுகிறது.

எப்படி நுழைகிறது: இந்த அமீபா பொதுவாக "மூளை உண்ணும் அமீபா" என்று அழைக்கப்படுகிறது. இது அசுத்தமான நன்னீர் மூலம் தான் பரவும்.. பொதுவாகவே இது மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். உடலுக்கு நுழைந்தவுடன் இது முதலில் குறிவைப்பது மூளையை தான்.. நமது உடலில் உள்ள திசுக்களை உணவாக சாப்பிட்டே இது வளர்க்கிறது..

இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். நோய் பாதிப்பு அதிகரிக்கும் போது குழப்பம், வலிப்பு, கோமா மற்றும் போன்ற சீரிஸயான பாதிப்புகளும் கூட ஏற்படும். நோய் பாதிப்பு ஏற்பட்ட 1 முதல் 12 நாட்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட தொடங்கும்.. சட்டென இதன் தீவிரம் அதிகரிக்கும் நிலையில், 5-18 நாட்களில் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எப்படி பரவுகிறது: கேரளாவில் இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் தமிழக எல்லை பகுதிகளில் வாழும் மக்களும் அச்சத்தில் உள்ளனர். ஆனால், இது கொரோனா போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால் நாம் கவலைப்பட தேவையில்லை. அமீபா இருக்கும் அசுத்தமான நன்னீரில் குளிக்கும் போது மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மற்றபடி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+