டேஞ்சர்.. 2 மணி நேரம் நாற்காலியில் அமர்கிறீர்களா? சிகரெட்போல் ஆபத்தாம்! தப்பிக்க ஈசி ஐடியா இருக்கு
டெல்லி: தொடர்ந்து 2 மணி நேரம் அமர்ந்து இருப்பது ஒரு சிகரெட் புகைப்பதைபோல் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நேரம் அமர்ந்துகொண்டு பணி புரிவதால் இதயம், நுரையீரல், கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கும் மருத்துவர், இதை தவிர்ப்பதற்காக வழிமுறைகளையும் பகிர்ந்து உள்ளார்.
நகைக்கடைகள், துணிக்கடைகள், மெடிக்கல்கள் போன்றவற்றில் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், அமர்ந்துகொண்டு வேலை செய்வதன் காரணமாகவும் உடல்நல சிக்கல்கள் வருவதாக சொன்னால் நம்ப முடிகிறதா? முடியாவிட்டாலும் அதுதான் உண்மை என்கிறார்கள் மருத்துவர்கள்.

எல்லாமே கணினிமயமாகிவிட்ட இந்த காலத்தில் கணினி அல்லது லேப்டாப்புகளுடனே நேரத்தை செலவிடுகிறோம். குறிப்பாக கணினியை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஐடி ஊழியர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். அதேபோல் தையல் உள்ளிட்ட தொழில் செய்பவர்களும் அமர்ந்தே இருக்கின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்களும் பல மணி நேரம் அமர்ந்தே கற்று வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் தொடர்ந்து 2 மணி நேரம் நாற்காலியில் அமர்ந்தே இருந்தால் எண்ணிப் பார்க்க முடியாத பல பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக எழும்புகள் பலவீனமாகுமாம். குறிப்பாக 2 மணி நேரத்துக்கு அதிகமாக ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதால் நமது உடல் வாகே மாறிவிடுவதுடன், சர்க்கரை வியாதி, இதய பிரச்சனைகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் பிரியங்கா ரோஹட்கி.
அதாவது ஒரு நபர் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக அமர்ந்து இருப்பது ஒரு சிகெரெட் புகைப்பதற்கு இணையான ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கிறார். இதுகுறித்து பேசிய மருத்துவர் பிரியங்கா, "இதனால் முழு உடலின் நரம்புகளிலும் விறைப்பு தன்மை ஏற்படுவதும் எழும்பு முறிவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஒரே மாதிரி அமர்ந்துகொண்டு தொடர்ந்து கணினி முன்பாக நீங்கள் அமர்ந்து இருந்தால் தசைகளோடு இணைந்து இருக்கும் நரம்புகள் விறைத்துவிடும்.
ஒரே மாதிரி தொடர்ச்சியாக 2 மணி நேரம் நாற்காலியில் அமர்ந்து இருப்பதால் நமது உடலில் உள்ள ஆற்றல் சரியாக பயன்படுத்தப்படுவது கிடையாது. இது மெடபாலிசத்தை குறைக்கிறது. அதாவது, உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முறையாக பயன்படுத்தப்படாது. நமது உடலில் அனைத்து சத்துக்களும் பயன்படுத்தப்படாதபோது அவை, கல்லீரலில் மொத்தமாக போய் தேங்கும்.
இதனால் கல்லீரலில் கொழுப்பு தேங்குவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இருப்பது குறைவு. கணினியில் நாம் வேலை செய்யும்போது நமது நுரையீரல் மெதுவாக வேலை செய்யும். மூச்சுவிடும் திறன் குறைகிறது. இதன் காரணமாக நுறையீரலின் வேலை திறனும் குறைந்துவிடுகிறது. குறிப்பாக நுரையீரல் அதன் பாதி ஆற்றலை இழந்துவிடுகிறது. அதேபோல் ஹார்மோன்கள் சமநிலையை இழக்கின்றன.
எனவே நாம் வேலை செய்யும் விதத்தில் சிறிய மாறுதல்களை கொண்டு வந்தால் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து தப்ப முடியும். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை நாற்காலியில் இருந்து எழ வேண்டும். அதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் நாற்காலியில் அமர்ந்துகொண்டு இருக்கும்போதும் உடல் பாகங்களை அசைத்து சிறிய உடற்பயிற்சிகளை செய்யலாம். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் நாற்காலியில் இருந்து எழுந்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை அமராமல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை 2 முதல் 3 நிமிடங்கள் நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து தப்பலாம். காலை 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. அது மிகவும் முக்கியம். 80 நிமிடங்கள் நாற்காலியில் அமர்ந்தால் 2 நிமிடங்கள் எழ வேண்டும் என்பது விதி. அலுவலகத்தில் லிப்டில் செல்லாமல் படிகளில் ஏறி இறங்கலாம். அதேபோல் அலுவலகம் செல்வோர் சிப்ஸ், பிஸ்கட், பீசா, பர்கர் போன்றவற்றை வேலை செய்யும்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்." என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications