Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி சாப்பிடுவீங்களா?.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சளித் தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு தொடர்பான 90 மருந்துகள் போலியான மற்றும் தரமற்றவையாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

நம் உடலில் ஏற்படும் நோய் உபாதைகளுக்கு மருத்துவர் ஆலோசனையின்றி எந்தவொரு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்படி ஆலோசனையின்றி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பாலும் சளி, இருமல், காய்ச்சல் என எந்தவிதமான நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

health medicines

Image: AI created

அதேபோல, குழந்தைகளுக்கு ஏற்கனவே மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை மெடிக்கல் ஷாப்புகளில் இருந்து வாங்கி உபயோகிக்கின்றனர். ஒவ்வொரு நோயும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான வகைகளில் ஏற்படுகின்றன. வயது, காலநிலை, எதனால் நோய் வந்தது போன்ற எந்தவொரு மெடிக்கல் ஹிஸ்டரியும் இல்லாமல் வெறுமெனே மருந்து கடைகளில் இருந்து மருந்துகள் வாங்கி உண்பது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். சமயத்தில் இது உயிரிழப்புகளைக் கூட ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகும்.

சமீபகாலமாக மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட மற்றும் போலியான மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகள், கிருமித் தொற்று உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்துகளில் 80 சதவீத மருந்துகள் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் தொடர்பான விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

போலியான, தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு மருந்துகள் தொடர்பான விவரங்களை அரசு இணையதளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனவே, மருந்துகளைப் பயன்படுத்தும்போது உரிய மருத்துவ ஆலோசனையுடன் பெற வேண்டும் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

போலியான, தரமற்ற மருந்துகள் தயாரித்த சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் முடிவு செய்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+