ஆளி விதை கேள்விப்பட்டுருக்கீங்களா.. மாரடைப்பு, மார்பக புற்றுநோயை தடுக்குமா?
சென்னை: சாலியா விதை அல்லது ஆளி விதை, அளவில் சிறியதாக இருந்தாலும் பல நன்மைகள் தரக்கூடியது. சாலியா விதைகள் (ஹலிம் விதைகள்) என்று அழைக்கப்படுவதுண்டு, மேலும் இதில் ஏராளமான மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது. ஒரு நாளைக்கு தேவையான புரத சத்து (Proteins), நல்ல கொழுப்பு (Good Fats), கால்சியம், ஒமேகா 3, நார்சத்து, இரும்புச் சத்து, கார்போஹைட்ரெட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3, மற்றும் மினெரல்ஸ் (Minerals) என அதிக சத்துக்கள் இருப்பதால், சூப்பர் பூட் (Super Natural Food) என்று கூட சொல்லலாம்.

சாலியா விதையின் பயன்கள்
உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை வரலாம் தடுக்கிறது. இதில் உள்ள கேலக்டோகாக் பண்புகள், தாய்ப்பால் உற்பத்தியை தூண்டவும், அதிகரிக்க செய்கிறது. பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. விதையில் உள்ள நார்ச்சத்து, புரதசத்து ஆகியவை அடிக்கடி பசி ஏற்படுவதை தவிர்த்து, உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க வழிவகுக்கிறது.
மாரடைப்பு, புற்றுநோய் வராமல் பாதுகாக்க
இந்த விதையில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள் அதிக அளவில் இருப்பதால், மாரடைப்பு மற்றும் புற்று நோய் உருவாக்கக்கூடிய செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்று நோய் வராமல் தடுக்கவும், மீன்களில் உள்ள சத்துக்களுக்கு இணையாக இந்த விதையில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. வாயு, வயிறு வீக்கம், ஆகிய பிரச்சனைகளை சரிசெய்யுவும், குடலில் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைகளை குணமாக்கும். காய்ச்சல், தொண்டை புண் போன்ற நோய் தொற்றுகளைத் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி நம்மை பாதுகாக்கிறது.
இன்சுலின் சுரப்பு, எலும்பு வறட்சியை தடுக்க
விதையில் உள்ள நார்சத்து மற்றும் லிக்னான்ஸ் (Lignans) இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, இன்சுலின் சுரப்பை சீர்படுத்துகிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மூட்டு வலிகள், மூட்டுகளில் ஏற்படக்கூடிய அழற்சி, தேய்மானம், வயது காரணமாக வரக்கூடிய எலும்பு வறட்சியை தடுக்க ஆற்றல் கொண்டது. இந்த விதையை நன்கு அரைத்து நீர்மோரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடித்து வரலாம். எல்லா வயதினரும் தாராளமாக உட்கொள்ளலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் மருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது மிகவும் நல்லது.
தலை முடி உதிர்வை தடுக்க, முகம் பளபளக்க
தேவையான அளவு சாலியா விதையை பாலில் ஊறவைத்து, அதனுடன் வைட்டமின் இ ஆயில் சிறிது அளவு சேர்த்து மைய அரைத்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் கழித்து முகம் கழுவினால், சருமம் மேன்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மிக குறைந்த அளவில் இந்த விதையை தண்ணீரில் 7-8 மணி நேரம் ஊறவைத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, அதனுடன் தேவையான பால் சேர்த்து, விதையை நன்கு மென்று சாப்பிட்டு வேண்டும். இவ்வாறு சுமார் 1-2 மாதம் வரை இரவு சாப்பிட்டுவந்தால், முடி உதிர்வை தடுத்து, நல்ல தீர்வு கிடைக்கும்.












Click it and Unblock the Notifications