Karpooravalli: சளி, இருமல், தொண்டை கரகரப்பா! ஆமாம்பா ஆமாவா? வீசிங்கிற்கு அருமருந்து
சென்னை: சளி, இருமல், தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம், வீட்டு வைத்தியம் இருக்கே! கற்பூரவள்ளி இலைகளை பயன்படுத்தினால் போதுமானது. இதில் சற்று காரல் தன்மை இருக்கிறது. அதனால் உள்ளுக்குள் சாப்பிடும் போது கவனமாக சாப்பிட வேண்டும்.
இந்த கற்பூரவள்ளி இலையை ஓமவல்லி என்றும் கூறுவார்கள். இது கற்பூரம் போல் வாசனை வரும். இந்த இலைகள் செரிமானத்திற்கு நல்லது. வீட்டில் எந்த செடியை வைக்கிறோமோ இல்லையோ துளசி, கற்பூரவள்ளி செடி என்பது அவசியமானது. அதிலும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய செடிகள் இவை ஆகும்.

இதுகுறித்து ராஜா ஹனி எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கற்பூரவள்ளி மூலிகை பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம். கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் இலைகள் தடிமனாகவும், சதைப் பற்றுக் கொண்டும், கார் போல நறுமணம் வீசும். கற்பூரவள்ளி இலைகளில் யூஜெனோல், கார்வாக்ரோல் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.
கற்பூரவள்ளியின் பயன்கள்
சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலைகளைச் சாறாகவோ அல்லது கஷாயமாகவோ செய்து குடிக்கலாம்.
கற்பூரவள்ளி இலைகளை மென்று சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். வயிற்றுப் புண் மற்றும் அஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
கற்பூரவள்ளி இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதனால் உடலில் தொற்றுநோய்கள் ஏற்படுவது குறையும்.
கற்பூரவள்ளி இலைகளை அரைத்து சருமத்தில் பூசினால் தோல் நோய்கள் குணமாகும். குறிப்பாக, அரிப்பு, தடிப்பு, மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு இது நல்ல பலன் தரும்.
கற்பூரவள்ளி சாறு சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும். மேலும், இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கற்பூரவள்ளி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீராவியை உள்ளிழுத்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொல்லை குறையும்.
கற்பூரவள்ளி எண்ணெய் தலைவலி மற்றும் உடல் வலியைப் போக்க உதவும்.
கற்பூரவள்ளியை பயன்படுத்தும் முறை
கற்பூரவள்ளி இலைகளைச் சாறாகவோ அல்லது கஷாயமாகவோ செய்து குடிக்கலாம்.
கற்பூரவள்ளி இலைகளை சூப் அல்லது சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம்.
கற்பூரவள்ளி இலைகளை அரைத்து பேஸ்ட்டாகப் பயன்படுத்தலாம்.
கற்பூரவள்ளி எண்ணெயை சருமத்தில் தடவலாம் அல்லது தலைக்குத் தேய்க்கலாம்.
கற்பூரவள்ளி ஒரு இயற்கையான மருத்துவ மூலிகை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெஞ்சு சளி இருப்போர் கற்பூரவள்ளி இலைகள், துளசி ஆகியவற்றை சிறிதளவு எடுத்துக் கொண்டு அவற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஆற வைத்து விலா எலும்புகளில் இருக்கும் கேப்புகளில் தடவலாம். இத்துடன் நொச்சி இலைகள் கிடைத்தால் அதையும் போட்டு காய்ச்சலாம். இந்த எண்ணெய்யை பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் தடவலாம்.
குழந்தைகளுக்கும் தடவி விடலாம். ஆனால் கற்பூரவள்ளி காரல் அதிகமாக இருக்கும். குழந்தைக்கு எரியாத வண்ணம் லேசான தடவ வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இயற்கையோடு ஒன்றி இருத்தல் நல்லதுதான். ஆனால் நம் உடல் இந்த உணவு பொருளை ஏற்குமா என்பதை மருத்துவரிடம் கேட்டு அவரது ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications