Sangu Poo: உள்ளங்கை, உள்ளங்கால்களில் அதிக வியர்வை வருகிறதா? சங்குப்பூவின் இலைகளை பயன்படுத்தலாமே!
சென்னை: சங்குப் பூ தெரியுமா?அந்த பூவில் வேர் முதல் நுனி வரை எத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த சங்குப்பூ ஏராளமான நோய்களுக்கு மருந்தாகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அவை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்.
சங்குப்பூ கொடி வகையை சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது வெள்ளை, நீலம், கருநீலம், ஊதா, வெண்மை கலந்த கருநீலம், உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகிறது. இந்த பூ ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சங்குப்பூ மற்ற மலர்களை போல் அதிக நறுமணம் கொண்டவை . இதன் மருத்துவக் குணங்களும் ஏராளம். சங்குப் பூச்செடியின் வேரில் இருந்து சாறு பிழிந்து மூக்கில் 5 சொட்டுகளை விட்டால் போதும் ஒற்றைத் தலைவலி பறந்து ஓடிவிடும்.
அடிக்கடி சளி பிடித்தால் சங்கு பூ செடியின் இலைகளை கல் உப்பு, கடுகு எண்ணெய்யையுடன் அரைத்து அதன் பேஸ்ட்டை நெஞ்சு பகுதியில் பூச வேண்டும். அப்போது சளி பிரச்சினை குணமாகும். மேலும் இந்த பேஸ்ட்டை வீக்கம் இருக்கும் இடத்தில் போட்டால் வீக்கம் குறையும். இந்த பூ மன அழுத்தத்தை குறைக்கும்.
நம்மை சுறுசுறுப்பாக்கும். இந்த பூவில் டீ குடிக்கலாம். இந்த பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அத்துடன் இஞ்சி சாறு சேர்த்து குடிக்கலாம். இதற்கு சுவைக்காக சர்க்கரை சேர்க்காமல் கருப்பட்டி, பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.
சங்குப்பூ உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும பிரச்சினைகளுக்கும் நன்மை பயக்கும். சங்குப் பூவின் வேரை காயவைத்து பொடி செய்து அத்துடன் தேன், ரோஸ் வாட்டர் கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு படிப்படியாக குறையும். சருமம் தங்கம் போல் ஜொலிக்கும். உள்ளங்கை, உள்ளங்கால்களில் அதிக வியர்வை வந்தால் அந்த இலைகளை பிழிந்து 2 ஸ்பூன் சாறு எடுத்து இத்துடன் 7, 8 துளி இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் வியர்வை பிரச்சினை குறையும்.
வயிற்றை சுத்தம் செய்யவும் இந்த பூச்செடியின் விதைகளை பயன்படுத்தலாம். இந்த பூச்செடியின் விதைகளை 2 கிராம் எடுத்து 2 சிட்டிகை, உப்பு, மற்றும் 2 சிட்டிகை சுக்கை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து இரவில் குடித்து வரலாம். இந்த இலைகள் துவர்ப்பு சுவை, வெப்பத்தன்மை கொண்டவை.
இவை சிறுநீரை பெருக்கும், குடல் புழுக்களை அழிக்கும். உடலில் வெப்பத்தை தணிக்கும். தலை நோய், கண் நோய்களை கட்டுப்படுத்தும். சங்குப்பூவின் சாறு கல்லீரலை பலப்படுத்தும். தேமல், கரும்புள்ளிகளை குணப்படுத்தும். சங்குப்பூவின் விதை புளிப்பாக இருக்கும். உடலுக்கு வலிமை சேர்க்க சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகிறது. சங்குப்பூ ஏறு கொடி வகையை சார்ந்தது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications