Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டையில் நீர் கோர்த்து விட்டதா? தலைபாரத்தை போக்க உதவும் நொச்சி இலை.. மூலிகை தலையணை பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: மண்டையை பிளக்கக்கூடிய தலைபாரம் வந்துவிட்டால், சொல்ல முடியாத வேதனையை அனுபவிக்க நேரிடும்.. தலையில் நீர் கோர்த்து கொண்டு, சுவாச கோளாறுகளையும் ஏற்படுத்திவிடும்.. இப்படியான தலைபாரம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? மண்டையில் நீர் கோர்த்தல் குறைய வீட்டு வைத்தியங்கள் என்னென்ன? சுவாச கோளாறுகளுக்கு உதவும் மூலிகைகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

தலைபாரம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. முக்கியமாக சைனஸ் பிரச்சனை பிரதான காரணமாக இருந்து வருகிறது.

sinus Nochi leaves Mooligai Pillow

மண்டையில் நீர் கோர்த்தல்

அதேபோல, உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை, காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், மழை மற்றும் பனிக்காலங்களில் தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் பைக்கில் அதிக நேரம் பயணம் செய்தல், தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருப்பது என ஏகப்பட்ட காரணங்களால் தலையில் நீர்கோர்த்து, தலைவலி தொந்தரவு வருகிறது.

அதேபோல, மன அழுத்தம், ஒற்றைத்தலைவலி, கண் குறைபாடுகள் காரணமாகவும் தலைவலி வரலாம்.. இதில் நீர் கோர்த்துக்கொண்டு தலைவலி வந்தால், பின் மண்டை வரை குடைச்சலும் வலியும் இருக்கும்.. அதிகமான வியர்வை வந்தாலும், மண்டையில் நீர்கோர்த்துக் கொள்ளும்.. இதற்கு எளிய மூலிகைகள் கை கொடுத்து மருந்தாக உதவுகின்றன.

நொச்சி தைலம்

குறிப்பாக, நொச்சி தைலம், பீனிச தைலம், சுக்கு தைலம் போன்றவற்றை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வரும்போது, மண்டையில் நீர் சேராது.. சளித்தொல்லையும் வராது.

கற்பூரவல்லி, துளசி, வெற்றிலை, சுக்கு, மஞ்சள் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.. இரவு தூங்கும்போது, முகம் மட்டுமல்லாமல், கழுத்து பகுதியிலும் இந்த பற்றை தடவி விட வேண்டும்.. இது மண்டையிலுள்ள நீரை மறுநாளே வெளிக் கொண்டுவந்துவிடும்.. தலைபாரமும் நீங்கிவிடும்.

அல்லது கருப்பு வெற்றிலையுடன் கற்பூரத்தையும் வைத்து விழுதாக அரைத்து பற்று போடலாம். அதேபோல, ஒரு கைப்பிடி மல்லி விதைகளை அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.

கற்பூரவல்லி இலைகள்

தோசை கல் அல்லது மண் சட்டியை அடுப்பில் தீயில் வைத்து சூடு செய்து கொள்ள வேண்டும்.. ஒரு காட்டன் துணியை உருட்டி மண் சட்டியில் வைக்க வேண்டும். அந்த துணியில் ஓரளவு சூடு ஏறியதுமே, ஒத்தடம் போல நெற்றியிலும், நெஞ்சு பகுதியிலும் வைத்து எடுக்கலாம்.. இதனாலும் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். தலைவலியும் குறையும்

தூதுவளையின் பூக்களில் துவையல் அரைத்து சாப்பிடலாம். யூகலிப்டஸ் இலைகளை வைத்தும் ஆவி பிடிக்கலாம்.. வேப்பிலை, புதினா, துளசி கற்பூர வல்லி இலைகளை நீரில் சேர்த்தும் ஆவி பிடிக்கலாம்.. சுக்கு நீரில் இழைத்து போடுவதாலும், நீர் இறங்கிவிடும்.

வெற்றிலையின் வெற்றி

குழந்தைகளுக்கு சளி தொல்லை இருந்தால், இளம் வெற்றிலையின் காம்பை கிள்ளி வாயில் போட்டு அதன் சான்றை விழுங்க சொல்ல வேண்டும்.. இதனால் சளி கரைந்து வெளியேறும்..

நொச்சி இலைகளையும், சிறிது பச்சரியையும், ஒரு தலையணை உரைக்குள் நிரப்ப வேண்டும்.. இறுதியில் இதனை வைத்தே அந்த உரையை தலையணையாக தைத்து, அல் படுத்து உறங்க வேண்டும். இதனால், நீண்ட கால தலைவலி, சைனஸ், தலைபாரம் போன்றவை நீங்கிவிடும்.. மாதம் ஒருமுறை உரையிலிருந்து அரிசி, இலைகளை மாற்றி, வேறு நிரப்பி வைத்து மீண்டும் தைத்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+