இட்லி, தோசைக்கு மாவு அரைத்து! ஃபிரிட்ஜில் வைத்தாலும் புளித்துவிட்டதா? ஃபிரஷ்ஷாக்க ஈஸி டிப்ஸ்!
சென்னை: இட்லி, தோசை மாவை அரைத்து என்னதான் பிரிட்ஜில் வைத்தாலும் அது நாளானால் புளிக்கத்தான் செய்யும். அவ்வாறு புளித்தால் அதை ஃபிரஷ் மாவாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் மாவு புளித்துவிட்டால் அதை ஃபிரஷ்ஷாக மாற்ற எளிதான டிப்ஸை பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் முக்கிய உணவுப் பொருளாக இட்லி, தோசை விளங்குகிறது. இதை எந்த நாட்டுக்குச் சென்றாலும் நம் தென்னிந்திய மக்கள் மறக்காமல் வீட்டில் தயார் செய்து சாப்பிடுகிறார்கள். இட்லி என்பது ஆவியில் வைத்து அவிப்பதால் உடலுக்கு நல்லது.

ஆனால் இட்லி தட்டில் எண்ணெய் தடவாமல் துணியை வைத்து இட்லி ஊற்றினால், அந்த இட்லி ஆரோக்கியமானது. உடல் நலம் சரியில்லாதவர்கள், குழந்தை பிறந்த பெண்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களை இட்லி சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
இதுதான் எளிதில் ஜீரணிக்கும் என்பதால் இதை உண்ண சொல்கிறார்கள். இட்லி, தோசைக்கு வீட்டிலேயே மாவு அரைத்து பயன்படுத்துகிறார்கள். இதை பிரிட்ஜில் வைத்து தேவையான போது பயன்படுத்துகிறார்கள். இந்த சமயங்களில் இட்லி மாவு புளித்துவிட்டால், அதில் இட்லி, தோசை என எதை செய்தாலும் அதுவும் புளித்துவிடும்.
மேலும் அதை சாப்பிட முடியாமல் வீணாகிவிடும். அதற்கு அந்த புளித்த மாவில் 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் நீர், மாவின் மேல் தெளிந்து நிற்கும். அதை வடித்துவிட்டால் புளிப்பு போய்விடும். அது போல் கடலை மாவு, சர்க்கரை, வெண்ணெய் ஆகியவற்றை தேவைக்கேற்ப எடுத்து தண்ணீரில் கரைத்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
புளித்த மாவுடன் இந்த பேஸ்ட்டை கலந்தால் மாவில் உள்ள புளிப்பு நீங்கி புதிது போல் ஆகிவிடும். இதன் பிறகு தோசையாக ஊற்றினால் மாவு கொஞ்சம் கூட புளிக்காது, அதே சமயம் ருசியாகவும் இருக்கும். இன்னொரு வழி- மாவில் ரவை அல்லது அரிசி மாவு கலந்து தோசை வார்த்தால் புளிப்பு இருக்காது.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம், கேரட் துருவல், தேங்காய் துருவல் ஆகியவற்றை மாவில் கலந்து ஊத்தப்பம் போல் ஊற்றி சாப்பிட்டாலும் மாவு புளிக்காது. மாவு அரைத்தவுடன் உப்பு போட்டு கலக்காமல் தேவையான போது உப்பு போட்டாலும் மாவு புளிக்காது.
எல்லாவற்றுக்கும் மேல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு. அதற்கான தன்மை போனால் அந்த பொருள் எதிர் விளைவை ஏற்படுத்தும். எனவே பிரிட்ஜில் வைத்தாலும் சீக்கிரம் அவற்றை பயன்படுத்தி காலி செய்துவிடுங்கள்.












Click it and Unblock the Notifications