பாடாய்ப்படுத்தும் இடுப்பு வலிக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு! தாய்ப்பால் பெருக தண்ணீர்விட்டான் கிழங்கு
சென்னை: பெண்களுக்கு அருமருந்தாக திகழும் தண்ணீர் விட்டான் கிழங்கு மூலிகையை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் தண்ணீர் விட்டான் கிழங்கை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஏன் தெரியுமா?
6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற மூலிகை.. ஊசிபோன்ற இலை, முட்கள் போன்ற தண்டுகள் காணப்படும். ஆனால், இதன் கிழங்கிலிருந்துதான் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

பிரச்சனைகள்: பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் விட்டான் மூலிகை பயன்படுகிறது என்றாலும், பெண்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.. பருவமடைந்த பெண்கள், மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாக தோற்றமளிப்பார்கள்.. அவர்களுக்கு இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த மருந்துகளை தரும்போது, ஆரோக்கியம் அதிகரிக்குமாம்..
கர்ப்பிணிகளுக்கு தரப்படும் மருந்துகள் ரத்த விருத்திக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும். அதேபோல, உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதாகவும், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்... இவை எல்லாவற்றையுமே தரக்கூடிய ஒரே மூலிகைதான் தண்ணீர்விட்டான் கிழங்கு.
கர்ப்ப காலம்: கர்ப்ப காலத்தில் தொடர்ந்து இந்த கிழங்கை பெண்கள் சாப்பிடும்போது, பிரசவம் எளிதாகும் என்பார்கள்.. முக்கியமாக, பனிக்குடத்தில் உள்ள தண்ணீர் குறையாமல் சுகப்பிரசவம் ஏற்பட இந்த கிழங்கு துணைபுரிவதாக ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டுமென்றால், நம்முடைய முன்னோர்கள் இந்த மூலிகையைதான் மருந்தாக கொடுப்பார்களாம்.
மாதவிடாய் நேரங்களில் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த, கை கொடுப்பது இந்த கிழங்குதான். ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதுடன், ஹார்மோன் செயல்பாடுகளின் சீரற்ற தன்மையை சீராக்குகிறது..
மூலிகை மருந்து: "மெனோபாஸ்" என்று சொல்லப்படும் மாதவிடாய் நிற்கும் நேரங்களில், பதட்டம், பயம், மன அழுத்தம் போன்றவைகள் பெண்களுக்கு ஏற்படக்கூடிய தொந்தரவுகளாகும். சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் உடலில் ஏற்படும். இந்த பிரச்சனைகளையும், தண்ணீர் விட்டான் மூலிகை தீர்க்கிறது.
சமீபகாலமாகவே, பிசிஓடி என்று சொல்லப்படும் கருப்பை கட்டிகள், இளம்பெண்களை அதிகமாகவே தாக்கி வருகிறது.. இதனால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கருமுட்டை உற்பத்தியை பெருகும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது. கர்ப்பப்பை கட்டிகளை இந்த மூலிகை கரைப்பதுடன், பெண்களின் கருத்தரிப்பு தன்மையையும் அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
டாக்டர்கள் ஆலோசனை: குளிர்ச்சியும், இனிப்பு சுவையும் நிறைந்த இந்த மூலிகை காய்ந்த நிலையிலேயே நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கிறது. பெரும்பாலும் இந்த மூலிகையை, காயவைத்து இடித்து வைத்து பொடியாக்கியே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.
அல்லது ஷதாவரி பொடி அல்லது சூரணம் நாட்டு மருந்து, ஆயுர்வேத மெடிக்கல் ஷாப்களிலும் கிடைக்கிறது.. குழந்தை பெற்ற பெண்கள், இதை சூடான பாலில் அரை ஸ்பூன் கலந்து குடிக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெறாமல் இதுபோன்ற மூலிகைகளை சாப்பிடக்கூடாது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications