For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 வயது மகளை கோவிலுக்கு நரபலி கொடுத்த தந்தை கைது

Google Oneindia Tamil News

சியோனி: தனது மகளை கோவிலுக்கு நரபலி கொடுத்த தந்தையை கைது செய்துள்ளனர் மத்தியப்பிரதேச போலீசார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் மலைவாழ் மக்கள் கிராமமான ஜோலாவைச் சேர்ந்த சத்லால் இர்பாச்சே, தனது 8 வயது மகள் ரிதுவை அழைத்துக் கொண்டு துருங்காவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர், துருங்காவில் உள்ள கோவிலுக்கு ரிதுவை அழைத்துச் சென்ற சத்லால், சாமி தரிசனத்திற்கு பின், யாரும் எதிர்பார்க்காத போது கோவில் முன்பு மகள் ரிதுவை நரபலி கொடுத்துள்ளார்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சத்லாலை கைது செய்தனர்.

சத்லால் என்ன காரணத்திற்காக சிறுமியை நரபலி கொடுத்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற மகளை தந்தையே நரபலி கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

English summary
In a ghastly incident, a former Janpad (district sub-unit) member allegedly "sacrificed" his minor daughter in a temple at Turga village in this district in Madhya Pradesh today, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X