2 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ரத்தம் கொட்டக் கொட்ட சாலையில் போட்ட பரிதாபம்
லூதியானா: லூதியானாவில் 2 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். ரத்தம் கொட்டிய நிலையில் அந்த சிறுமியை சாலையோரத்திலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுமி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக கிடந்த நிலையைப் பார்த்து அதிர்ந்து போன ஒருவர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. அந்த சிறுமியின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர். அங்குள்ள குடிசைப் பகுதியில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் சிறுமியின் தந்தை எழுந்துள்ளார். அப்போது தனது மகளைக் காணாமல் திடுக்கிட்டு அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் காணவில்லை. மேலும் தலைமாட்டில் வைத்திருந்த ரூ. 8000 பணத்தையும் காணாமல் அதிர்ந்தார்.
இந்த நிலையில்தான் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.