டிஎன்எஸ்டிசியில் வேலை! 688 பணியிடங்கள்! டிகிரி முடிச்சவங்களும் விண்ணப்பிக்கலாம்! நாளைதான் கடைசி நாள்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் 688 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த பயிற்சி பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் வாயிலாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவமனாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் உள்ளது. போக்குவரத்து கழகத்தின் பல்வேறு மண்டலங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்படும்.

அதேபோல அப்ரெண்டீஸ் எனப்படும் ஒப்பந்த அடிப்படையிலான பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 688 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
காலிப்பணியிடங்கள் விவரம்:
இன்ஜினியரிங் பட்டதாரி பயிற்சி காலியிடங்களின் எண்ணிக்கை: 85
டி.என்.எஸ்.டி.சி, - மதுரை : 20
கும்பகோணம்: 35
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் - 30
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் / சிவில் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
பட்டயப் பயிற்சி: (Technician (Diploma)
காலியிடங்களின் எண்ணிக்கை : 303
மதுரை: 51
கும்பகோணம்: 62
எம்.டி.சி சென்னை: 190
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் / சிவில் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 8,000.
பட்டதாரி பயிற்சி:
காலியிடங்களின் எண்ணிக்கை: 300 (TNSTC - Kumbakonam)
கல்வி தகுதி: பிஏ, பிஎஸ்சி, பி.காம், பிபிஏ, பிசிஏ, பிபிஎம் ஆகிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
பயிற்சி கால அளவு: 1 வருடம்
விண்ணப்பிப்பது எப்படி?:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.
www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தேர்வு செய்து செய்து அப்ளே செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024 விண்ணப்பிக்க நாளை ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும். தேர்வு அறிவிப்பை படிக்க இந்த இணையதளத்தை http://boat-srp.com/wp-content/uploads/2024/06/TNSTC_Notification_2024_25_3_Regions.pdf பார்வையிடவும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications