சென்னை ஐசிஎப் -இல் 782 பணியிடங்கள்.. நாளை தான் கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்னை ஐசிஎப்பில் 782 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
இந்திய ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை சென்னையில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 782 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பணி விவரம்: கார்பென்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், பெயிண்டர், வெல்டர், எம்எல்டி ரேடயோலாஜி, எம்எல்டி பாதோலாஜி உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 782 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் குறைந்தது 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு.
ஊதிய விவரம்: அப்ரென்டீஸ்(பயிற்சி) வகை பணியாகும். பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உதவித்தொகையாக வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதாவது நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை எப்படி?: விண்ணப்பதாரர்கள் மெரீட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எனினும், எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு உண்டு. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை கூடுதல் விபரங்களை https://pb.icf.gov.in/act/instructions.php அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications