'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே'.. ரியல் ராக்கி பாய்.. பீடி சுற்றும் தொழிலாளி மகன் டூ டிஆர்டிஓ விஞ்ஞானி
கொல்கத்தா: கேஜிஎப் படத்தில் வருவது போல் ரியல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாயின் கடின உழைப்பு மற்றும் கனவை நிறைவேற்றும் விதமாக, ஐஐடியில் படித்த கொத்தனார் மகன், இன்று இந்திய அரசின் டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். அவர் பெயர் தான் சுதீப்.
தோல்விகள் மற்றும் துன்பங்களை விட வேறு எதுவும் உங்களை வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு போகும் சக்தி இல்லை.. தோல்வி மற்றும் துன்பத்தை படிப்பனையாக கற்றவர்கள் அசாதாரணமான விஷயங்களைச் சாதிக்கும் சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள்.

கடின உழைப்பு மற்றும் செய்யும் செயலில் எந்த நிலை வந்தாலும் உறுதியுடன் இருப்பது போன்றவை தான் வெற்றியாளர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்குகிறது. அப்படி நமக்கும் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றை நாம் பார்க்க போகிறோம். சுதீப் மைதி என்பவர் தனது கனவுகளை ஜெயிக்க நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டார்.. ஆனால் அதனை எல்லாம் முறியடித்து சாதனையாளராகி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், பன்ஷ்குரா அருகே உள்ள புருஷோத்தம்பூர் கிராமத்திற்கு உள்பட்ட முகமது முராத் மைதி பாரா பகுதியைச் சேர்ந்த சுதீப்புக்கு சிறுவயதிலிருந்தே, சுதீப்புக்கு நாட்டின் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதற்காக சிறுவயதிலிருந்தே நம்பிக்கையுடன் படித்து திறமைகளை வளர்த்து வந்துள்ளார். சுதீப் ஆரம்பக் கல்வியை அதே கிராமத்தில் உள்ள துர்கா தொடக்கப் பள்ளியில் பயின்றார். பக்கத்து ஊரிலேயே பாலிடெக்னிக் படிப்பை முடித்த சுதீப், குவஹாத்தி ஐஐடியில் பி.டெக் பட்டம் மற்றும் எம்.டெக் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்..
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சுதீப்பின் தந்தை கோவிந்த மைதி கொத்தனாராக வேலை செய்தார். அவர் மகனை படிக்க வைக்க கடுமையாக போராடினார். கோவிந்த பாபு கொத்தனார் வேலை செய்து பல வீடுகளை கட்டிய போதிலும், வறுமை காரணமாக சொந்த வீடு கட்ட முடியவில்லை.
சுதீப் படித்துக் கொண்டிருக்கும் போதே, அவரது தந்தை சாலை விபத்தில் சிக்கினார், அதன் காரணமாக படிக்க முடியாத நிலை சுதீப்பிற்கு ஏற்பட்டிருக்கிறது. இக்கட்டான நிலையில் சுதீப்பின் தாய் பீடிகளை சுருட்டி விற்று தன் குழந்தைகளை படிக்க வைத்தார். தனது இரண்டு மகள்களை திருமணம் செய்து வைத்த சுதீப்பின் தாய், தனது மகனை தொடர்ந்து படிக்க வைத்தார்.
அதனால் படித்து முடித்த சுதீப், தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவரது ஆர்வமும் உறுதியும் அவருக்கு நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.
-
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
ஐடி துறைக்கு தான் ஆப்பு..10000 பேர் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட டெல்! இன்னும் தலைக்கு மேல் கத்தி தான் -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
மத்திய ஆயுத காவல் படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 69 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications