Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே'.. ரியல் ராக்கி பாய்.. பீடி சுற்றும் தொழிலாளி மகன் டூ டிஆர்டிஓ விஞ்ஞானி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கேஜிஎப் படத்தில் வருவது போல் ரியல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாயின் கடின உழைப்பு மற்றும் கனவை நிறைவேற்றும் விதமாக, ஐஐடியில் படித்த கொத்தனார் மகன், இன்று இந்திய அரசின் டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். அவர் பெயர் தான் சுதீப்.

தோல்விகள் மற்றும் துன்பங்களை விட வேறு எதுவும் உங்களை வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு போகும் சக்தி இல்லை.. தோல்வி மற்றும் துன்பத்தை படிப்பனையாக கற்றவர்கள் அசாதாரணமான விஷயங்களைச் சாதிக்கும் சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள்.

A real KGF story : disabled laborer son, studied at IIT, is now Scientist at DRDO

கடின உழைப்பு மற்றும் செய்யும் செயலில் எந்த நிலை வந்தாலும் உறுதியுடன் இருப்பது போன்றவை தான் வெற்றியாளர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்குகிறது. அப்படி நமக்கும் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றை நாம் பார்க்க போகிறோம். சுதீப் மைதி என்பவர் தனது கனவுகளை ஜெயிக்க நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டார்.. ஆனால் அதனை எல்லாம் முறியடித்து சாதனையாளராகி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், பன்ஷ்குரா அருகே உள்ள புருஷோத்தம்பூர் கிராமத்திற்கு உள்பட்ட முகமது முராத் மைதி பாரா பகுதியைச் சேர்ந்த சுதீப்புக்கு சிறுவயதிலிருந்தே, சுதீப்புக்கு நாட்டின் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதற்காக சிறுவயதிலிருந்தே நம்பிக்கையுடன் படித்து திறமைகளை வளர்த்து வந்துள்ளார். சுதீப் ஆரம்பக் கல்வியை அதே கிராமத்தில் உள்ள துர்கா தொடக்கப் பள்ளியில் பயின்றார். பக்கத்து ஊரிலேயே பாலிடெக்னிக் படிப்பை முடித்த சுதீப், குவஹாத்தி ஐஐடியில் பி.டெக் பட்டம் மற்றும் எம்.டெக் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்..

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சுதீப்பின் தந்தை கோவிந்த மைதி கொத்தனாராக வேலை செய்தார். அவர் மகனை படிக்க வைக்க கடுமையாக போராடினார். கோவிந்த பாபு கொத்தனார் வேலை செய்து பல வீடுகளை கட்டிய போதிலும், வறுமை காரணமாக சொந்த வீடு கட்ட முடியவில்லை.

சுதீப் படித்துக் கொண்டிருக்கும் போதே, அவரது தந்தை சாலை விபத்தில் சிக்கினார், அதன் காரணமாக படிக்க முடியாத நிலை சுதீப்பிற்கு ஏற்பட்டிருக்கிறது. இக்கட்டான நிலையில் சுதீப்பின் தாய் பீடிகளை சுருட்டி விற்று தன் குழந்தைகளை படிக்க வைத்தார். தனது இரண்டு மகள்களை திருமணம் செய்து வைத்த சுதீப்பின் தாய், தனது மகனை தொடர்ந்து படிக்க வைத்தார்.

அதனால் படித்து முடித்த சுதீப், தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவரது ஆர்வமும் உறுதியும் அவருக்கு நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+