30,000 பேர் இன்று முதல் பணி நீக்கம்.. திடீரென அறிவித்த அமேசான் நிறுவனம்.. ஊழியர்கள் கவலை
வாஷிங்டன்: பிரபல நிறுவனமான அமேசான் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை இன்று முதல் தொடங்க உள்ளது. இதனால் அமேசானில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேலையை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் உள்ளனர். இந்த பணி நீக்க நடவடிக்கையின் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை நீக்கி வருகிறது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வருகையால் தான் ஊழியர்கள் கொத்து கொத்தாக பணி நீக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள நிறுவனம் தான் அமேசான். உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது.
அமேசான் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தகவல் தொடர்பு, பாஸ்காஸ்டிங் உள்ளிட்ட பல பிரிவுகளில் குறைந்த அளவிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று முதல் அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.
உலகம் முழுவதும் அமேசானில் தற்போது 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது 30,000 ஊழியர்கள் என்பது அந்த நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதமாகும். மேலும் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஊழியர்கள் 27 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதனை ஒப்பிடும்போது தற்போதைய பணி நீக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இந்த பணி நீக்க நடவடிக்கையின் பின்னணி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது கொரோனா காலத்தில்அமேசானில் அதிகப்படியான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இப்போது நிறுவனத்தின் செலவை குறைத்து மறுகட்டமைப்பு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications