சென்னை ஆஞ்சநேயர் கோயிலில் வேலை.. அறநிலையத்துறை தந்த சான்ஸ்.. 8 ஆம் வகுப்பு தகுதியே.. 48,000 சம்பளம்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நங்கநல்லூரில் இருக்க கூடிய இந்த கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கை நிறைய சம்பளம் + சலுகை கொண்ட இந்த வேலை குறித்த விவரங்களளை இங்கே பார்க்கலாம்.

பக்த ஆஞ்சநேயர் கோயில்
சென்னை நங்கநல்லூரில் பக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இந்தக் கோயிலில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறநிலையத்தூறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எழுத்துதேர்வு எதுவும் இன்றி நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* டைப்பிஸ்ட் - 01 பதவி
* பிளம்பர் - 01 பதவி
* அலுவலக உதவியாளர் - 01 பதவி
* மின்சாரப் பணியாளர் - 01 பதவி
கல்வித் தகுதி:
* டைப்பிஸ்ட் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முது நிலை அல்லது இளநிலை டைப்பிங் முடித்து இருக்க வேண்டும்.
* பிளம்பர் பணிக்கு பிளம்பர் பாடப்பிரிவில் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் வழங்கிய தொழில் பயிற்சி நிறுவனச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி பெற்று இருக்க வேண்டும்.
* மின் பணியாளர் பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து மின்வாரிய தொழில் துறை பயிற்சி (ஐடிஐ) பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட பி சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அறநிலையத்துறை இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு:
* தட்டச்சர் - ரூ.15,300 - 48,700/-
* பிளம்பர் - ரூ.12,600 - 39,900/-
* அலுவலக உதவியாளர் - ரூ.12,600 - 39,900/-
* மின் பணியாளர் - ரூ.12,600 - 39,900/-
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் வழியாகவோ நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Executive Officer,
Arulmigu Adhivyadhihara Bhaktha Anjaneyar Temple,
Nanganallur,
Chennai - 600061.
* வின்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 18.12.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள் 05.45 PM ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications