ரூ.1.51 லட்சம் வரை சம்பளம்.. கேசியர் உள்பட 4 பிரிவுகளில் சூப்பர் வேலை.. அழைக்கும் எய்ம்ஸ்.. தயாரா?
சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனையில் கேசியர், வார்டன், நர்சிங் ஆபிசர் உள்பட 4 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.1.51 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது பிலாஸ்பூரில் அமைந்திருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன் விபரம் வருமாறு:
சீனியர் நர்சிங் ஆபிசர்: இந்த பணிக்கு 45 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 4 ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்து 3 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மெடிக்கல் சோசியல் வொர்க்கர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருப்பதோடு எம்ஏ சோசியல் வொர்க் அல்லது மெடிக்கல் சோசியல் வொர்க் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.44,900 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும்.
விடுதி காப்பாளர்: இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் 30 முதல் 45 வயதுக்குள் இருப்பதோடு டிகிரி அல்லது டிப்ளேமா பிரிவில் ஹவுஸ் கீப்பிங், மெட்டிரீயல் மேனேஜ்மென்ட், பப்ளிக் ரிலேஷன்ஸ், எஸ்டேட் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும்.
கேசியர்: இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.81,100 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: மேலும் வயது வரம்பை பொறுத்தமட்டில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 4ம் தேதிக்குள் www.pgimer.edu.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Computer Based Exam, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications