Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1.51 லட்சம் வரை சம்பளம்.. கேசியர் உள்பட 4 பிரிவுகளில் சூப்பர் வேலை.. அழைக்கும் எய்ம்ஸ்.. தயாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனையில் கேசியர், வார்டன், நர்சிங் ஆபிசர் உள்பட 4 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.1.51 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது.

 Bilaspur AIIMS reruitment for various post incluidng Senior Nursing Officer and Cashier

அந்த வகையில் தற்போது பிலாஸ்பூரில் அமைந்திருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன் விபரம் வருமாறு:

சீனியர் நர்சிங் ஆபிசர்: இந்த பணிக்கு 45 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 4 ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்து 3 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மெடிக்கல் சோசியல் வொர்க்கர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருப்பதோடு எம்ஏ சோசியல் வொர்க் அல்லது மெடிக்கல் சோசியல் வொர்க் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.44,900 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும்.

விடுதி காப்பாளர்: இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் 30 முதல் 45 வயதுக்குள் இருப்பதோடு டிகிரி அல்லது டிப்ளேமா பிரிவில் ஹவுஸ் கீப்பிங், மெட்டிரீயல் மேனேஜ்மென்ட், பப்ளிக் ரிலேஷன்ஸ், எஸ்டேட் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும்.

கேசியர்: இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.81,100 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: மேலும் வயது வரம்பை பொறுத்தமட்டில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 4ம் தேதிக்குள் www.pgimer.edu.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Computer Based Exam, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+