பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 400 மேலாண்மை பயிற்சிப் பணியிடங்கள்- உடனே விண்ணப்பிங்க
சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: பிஎஸ்என்எல்
காலியிடங்கள்: 400
வயதுவரம்பு: வெளிப்பிரிவிற்கு 30க்குள் இருக்க வேண்டும். உட்பிரிவிற்கு 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கணினியில், ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
நிதியியல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ, ஐசிடபுள்ஏ, சிஎஸ் போன்ற ஏதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 24,900 - 50,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 1500. மற்ற பிரிவினர்களுக்கு ரூபாய் 750.
விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2015
இதுபோன்ற மேலும் பல ஐடி துறை வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/இணையதளத்தினைப் பார்வையிடுங்க.