மத்திய அரசு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலை.. யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? முழுவிபரம்
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்ட்ரல் கோல்பில்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 139 ஜூனியர் டேட்டா என்ட்ரி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோல் இந்திய லிமிடெட் (Coal India Limited or CIL) கீழ் சென்ட்ரல் கோல்பில்ட்ஸ் லிமிடெட் (Central Coalfields Limited Or CCL) நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எத்தனை?
மத்திய கோல்பில்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Jr. Data Entry Operator) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு காலியாக உள்ள 139 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதோடு இந்த துறையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நிரந்தர ஊழியராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பம் செய்ய விரும்புவோரின் வயது என்பது குறைந்தபட்சமாக 18க்குள் இருக்க வேண்டும். அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிடபிள்யூடி விண்ணப்பத்தாரர்களுக்கு அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறனறி தேர்வு(Proficiency Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விருப்பம் உள்ளவர்கள் www.centralcoalfields.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து Personnel/NEE department, Darbhanga House, Ranchi - 834029 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் டிசம்பர் மாதம் 6ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் பக்கத்திலேயே பணிக்கான விண்ணப்பம் இருக்கும். இதனை தான் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications