சென்னையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்! சூப்பர் சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: மத்திய அரசின் சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.63 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
மத்திய வருவாய் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுங்கத்துறை நாடு முழுவதும் கப்பல் துறைமுகங்கள் மற்றும் சர்வதேச விமான அலுவலகங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன. சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் பொருட்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றை கண்கானிக்கும் அமைப்பாக சுங்க இலாகா உள்ளது.

சுங்கத்துறை அலுவலகம்
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இதன் அலுவலகம் உள்ளது. அந்த வகையில், சென்னையிலும் சுங்கத்துறை அலுவலகம் உள்ளது. மத்திய அரசு பணி என்பதால் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல ஆயிரங்களில் சம்பளம் கிடைக்கிறது. சென்னையில் உள்ள சுங்க அலுவலகத்தில் காலியாக உள்ள 10 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
டிரேட்ஸ்மேன் (Tradesman) - 02
மாலுமி (Seaman) - 06
எந்திர எண்ணெய் பராமரிப்பாளர் (Greaser) - 02
கல்வித் தகுதி:
* டிரேட்ஸ்மேன் பணிக்கு மெக்கானிக்/ டீசல்/ ஃபிட்டர்/வெல்டர்/எலக்ட்ரிஷியன் உள்ளிட்ட ஏதேனும் ஒரு படப்பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். ஒராண்டு பணி அனுபவம் அவசியம்.
* சீமேன் பதவிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் கடலில் செல்லும் இயந்திரக் கப்பலில் மூன்று வருட அனுபவம், பெற்று இருக்க வேண்டும்.
* Greaser பணிக்கு குறைந்தட்சம் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் கடலில் இயங்கும் இயந்திரமயமாக்கப்பட்ட கப்பல்களில், முதன்மை மற்றும் துணை இயந்திரங்களைப் பராமரிப்பதில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேற்கூறிய பணியிடங்களுக்கான கல்வித் தகுதியின் முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18-வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
* டிரேட்ஸ்மேன்: (லெவல் 2) ரூ..19,900 - 63,200/-
* சீமேன்- ரூ.18,000 - 56,900/-
* Greaser - ரூ.18,000 - 56,900/-
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். https://chennaicustoms.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்களின் நகல்களை அளிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து The Additional Commissioner Of Customs (establishment), Office Of The Commissioner Of Customs (general), 2nd Floor, Krishna Block, Rajaji Salai, Chennai-600001- Email Id - [email protected]. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் 30.04.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://chennaicustoms.gov.in/
-
நாணயம் அச்சிடும் ஆலையில் வேலை.. 95,000 சம்பளம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அப்ளை பண்ண ரெடியா? -
IT Jobs: ரூ.21 லட்சம் வரை சம்பளம்.. அனுபவம் தேவையில்லை.. இன்போசிஸ் பணிக்கு ஏப்ரல் 13 கடைசி நாள் -
IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு சென்னை எச்சிஎல் தரும் வேலை.. ஏப்ரல் 6ல் இண்டர்வியூ -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது















Click it and Unblock the Notifications