நாடு முழுக்க.. பல லட்சம் பேருக்கு.. இரவோடு இரவாக அனுப்பப்பட்ட ரூ.3000.. லிஸ்டில் இருக்கீங்களா?
சென்னை: நாடு முழுக்க பல லட்சம் ஊழியர்களின் EPFO கணக்கில் ரூ.3000 தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளது. முதல் வேளையில் புதிதாக பணிகளில் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது.
புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்காக, ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் சார்பாக EPFO கணக்கு தொடங்கப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் EPFO சுமார் 8.5 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) புதிதாக இணைந்த உறுப்பினர்களின் கணக்கில் குறைந்தபட்சம் ₹3,000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
EPFO மூலம் செலுத்தப்படும் தொகை
கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. தொழில் உற்பத்தித் துறையில் முதல் முறையாகப் பணியில் சேரும் ஊழியர்களின் முதல் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்துகிறது. மேலும், அனைத்துத் துறைகளிலும் புதிதாகப் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, வைப்பு நிதி சந்தாவில் ₹3,000 வரை அரசு வழங்குகிறது.
EPFO-வில் பதிவுசெய்து முதல் முறையாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒரு மாதச் சம்பளத்தை மத்திய அரசு மூன்று தவணைகளில் அவர்களின் EPFO கணக்கில் செலுத்தும். இதன் மூலம் அதிகபட்சமாக ₹15,000 வரை மத்திய அரசு செலுத்துகிறது. இதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ₹1 லட்சம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் EPFO-வில் இணைந்த 8.5 லட்சம் உறுப்பினர்களுக்கு, குறைந்தபட்சம் ₹3,000 அவர்களின் பிஎஃப் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இது அவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குச் செல்லாமல் பிஎஃப் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும்.
EPFO-வில் இணைந்த 8.5 லட்சம் உறுப்பினர்கள்
EPFO தற்போது பல முக்கியமான மாற்றங்களைச் செயல்படுத்த உள்ளது. இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எளிதாக எடுக்க முடியும். தற்போதுள்ள சிக்கலான நடைமுறையைத் தவிர்த்து, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அதன் உறுப்பினர்களுக்குப் பல மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள், வருங்கால வைப்பு நிதி (PF) விவரங்களை அணுகுவதையும், PF கணக்குகளை மாற்றுவதையும் எளிதாக்குகின்றன.
EPFO பக்கத்தை அணுகுவது கடினம்
முன்பு EPFO பக்கத்தை அணுகுவது கடினமாக இருந்தது. பல சமயங்களில் இணையதளம் செயல்படாததால், பல சேவைகளைப் பெற முடியவில்லை. EPFO சேவைகளை எளிதாக்கும் வகையில் தற்போது பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
'Passbook Lite' சேவை மூலம் PF இருப்பை விரைவாகச் சரிபார்க்க முடியும். அத்துடன், வேலை மாறுபவர்களுக்குத் தேவையான 'Annexure K' பரிமாற்றச் சான்றிதழை ஆன்லைனில் அணுகும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, புகார்களைக் குறைத்து, PF தகவல்களைப் பெறுவதை எளிமையாக்கும்.
இதுவரை, ஊழியர்கள் தங்கள் PF பங்களிப்புகள் மற்றும் திரும்பப் பெறும் விவரங்களைக் காண தனி 'Passbook' போர்ட்டலில் உள்நுழைய வேண்டியிருந்தது. 'Passbook Lite' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒரே உள்நுழைவு மூலம் EPFO உறுப்பினர் போர்ட்டலிலேயே இந்தத் தகவலை நேரடியாகப் பெறலாம்.
'EPFO - Passbook Lite' தனித்தனி போர்ட்டல்களுக்கு மாற வேண்டிய அவசியமின்றி ஒரே உள்நுழைவு மூலம் EPFO விவரங்களை அறிய உதவுகிறது. PF இருப்பு, எடுத்த தொகை, எடுக்கக்கூடிய தொகை, மற்றும் ஓய்வூதியத் தொகை போன்ற விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். விரிவான பதிவுகளை விரும்பும் பயனர்கள் பழைய 'Passbook' தளத்தைப் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, ஒரு மென்பொருள் பொறியாளர் தனது புதிய நிறுவனத்தில் எத்தனை மாதத்திற்கான PF பங்களிப்பைச் செலுத்தியுள்ளார் என்பதைச் சரிபார்க்க முன்பு தனி 'Passbook' போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். தற்போது, ஒரே உள்நுழைவு மூலம் அனைத்து விவரங்களையும் உடனடியாகச் சரிபார்த்து, நேரத்தையும் மன உளைச்சலையும் மிச்சப்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications