ரூ.21000 ஊதியம்..குழந்தைகள் சேவை மையத்தில் வேலை! பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! இன்னும் 10 நாள் தான்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் சேவை மையங்கள் மற்றும் குழந்தை உதவி மேசை அலுவலகங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மேற்பார்வையாளர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்கள் என மொத்தம் 7 காலியிடங்கள் உள்ளன. திண்டுக்கல்லைச் சேர்ந்த தகுதியான பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் குழந்தைகள் சேவை மையங்கள் மற்றும் குழந்தை உதவி மேசை (ஹெல்ப் டெஸ்க்) செயல்பட்டு வருகிறது
இவற்றின் மூலம் குழந்தைகள் நலன், பாதுகாப்பு, அவசர உதவி போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த உதவி மையங்களில் ஏழு காலி பணிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகம் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகத்தில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலிப்பணியிட விவரம்:
1. மேற்பார்வையாளர் (Supervisor)
மொத்த காலியிடங்கள்: 4 (திண்டுக்கல் ரயில் நிலையம் - 3, பழனி பேருந்து நிலையம் - 1)
சம்பளம்: மாதம் ரூ.21,000
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், சமூகப் பணி (Social Work), கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூக சமூகவியல், சமூகவியல் (Sociology) ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. வழக்கு பணியாளர் (Case Worker)
மொத்த காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி.
வயது வரம்பு: அதிகபட்ச வயது: 42
இந்த வேலைகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்., சம்பளம், பொறுப்புகள், பணியின் தன்மை அனைத்தும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சேவை செயல்பாடுகளுக்கானவையாக இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
பிளசிங்ஸ், பிளாட் எண்.4,
2-ஆவது குறுக்குத் தெரு (மாடி),
எஸ்பிஆர் நகர்,
மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்),
திண்டுக்கல் - 624004
தொலைபேசி: 0451-2904070
விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள், வயது ஆதாரம் மற்றும் முகவரி ஆதாரம் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.11.2025
முழு விவரங்களும் www.dindigul.nic.in என்ற இணையதளத்தை காணலாம்..
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications