Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத தயாராகும் தேர்வர்களுக்கு தேனி கலெக்டர் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

தேனி: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 15-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் வரும் ஜூன் 3-ந்தேதி, 7-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

Group-1 mock exams in Theni collector good news for candidates preparing to write Group 1 exams

மொத்தம் 70 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு ஏப்ரல் முதல், ஏப்ரல் 30-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

அடுத்ததாக குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த பலர் மும்முரமாக படித்து வருகிறார்கள். பலர் மாதிரி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசே மாதிரி தேர்வுகளையும், பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது வழக்கம். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற போகிறது.

தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில்," தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் வருகிற 3-ந்தேதி, 7-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி. தரத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரை 6379268661 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்" இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+