டிஎன்பிஎஸ்சி குரூப்- 2ஏ முடிவுகள்: டிசம்பர் 15ல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் - 2ஏ தேர்வின் முடிவுகள் டிசம்பர் 15 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பினை, டிஎன்பிஎஸ்சியின் பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சியின் சார்பில் நேர்முகதேர்வு அல்லாத குரூப்-2ஏ தேர்வு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் நடைபெற்றது. இத்தேர்வின் மூலமாக உதவியாளர், தனி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தேர்வின் முதல்நிலை முடிவுகள் வருகின்ற 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications