மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் காலியிடங்கள்.. வேலை தேடுவோருக்கு வந்தாச்சு அறிவிப்பு.. செம
மதுரை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தற்போதைய அறிவிப்பின்படி ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதி வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
Backend
* பேக்எண்ட் பிரிவில் ஜாவா (கோர் ஜாவா, ஓஓபி கான்செப்ட்) தெரிந்திருக்க வேண்டும்.
* ஸ்பிரிங், ஸ்பிரிங்புட், Hibernate/JPA உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
* Rest APIsல டெவலப்பிங்கில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
* மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்சரில் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும்.
* J2EE கான்செப்ட்ஸ் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.
Frontend
* Angular/React/Vue.js உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
* HTML5, CSS3, JavaScript, TypeScript உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு கொண்டிருக்க வேண்டும்.
* Building responsive UI மற்றும் Crossbrowser Compatibility தெரிந்திருக்க வேண்டும்.
Database & Tools
* SQL டேட்டாபேசஸ் (MySQL, PostgreSQL, Oracle) உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
* NoSQL databases (MongoDB, Cassandra Optional) தெரிந்திருக்க வேண்டும்.
* Git, Maven/Gradle தெரிந்திருக்க வேண்டும்.
* CI/CD tools (Jenkins, GitHub Actions, Azure DevOps - plus) தெரிந்திருக்க வேண்டும்.
அனுபவம் தேவை
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்டும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
மதுரையில் நியமனம்
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசிதேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. HCL-லில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. செம சான்ஸ் -
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications