ரூ. 58100 சம்பளம்.. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் 564 உதவியாளர் பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 564 அலுவலக உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்ப அண்மையில் அரசு அனுமதி அளித்தது. அதன்படி ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. எனவே தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 564 அலுவலக உதவியாளா் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர்களே நிரப்பிக் கொள்வதற்கான அனுமதிக் கடிதத்தை, 36 மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் கடந்த வாரம் அனுப்பி வைத்ததார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: தமிழகத்தில் 2020 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் கோரப்பட்டன. அதன்படி, அனைத்து மாவட்ட வருவாய் அலகிலும் மூன்றாண்டுகளுக்கு உட்பட்டு 564 காலிப் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் 42 இடங்கள் காலியாக உள்ளன. அரியலூரில் 12, செங்கல்பட்டில் 23, சென்னையில் 5, கோவையில் 15, கடலூரில் 16, தருமபுரியில் 10, திண்டுக்கல்லில் 23, ஈரோட்டில் 24, கள்ளக்குறிச்சியில் 22, காஞ்சிபுரத்தில் 2, கன்னியாகுமரியில் 23, கரூரில் 18, கிருஷ்ணகிரியில்15, மயிலாடுதுறையில் 22, நாகையில்14, நாமக்கல்லில் 13, நீலகிரியில் 3, பெரம்பலூரில் 7, புதுக்கோட்டையில் 13, ராமநாதபுரத்தில் 16, ராணிப்பேட்டையில் 8, சேலத்தில் 14, தென்காசியில் 13, தஞ்சாவூரில் 35, தேனியில் 30, திருச்சியில் 18, திருப்பத்தூரில் 3, திருவாரூரில் 23, தூத்துக்குடியில் 3, திருநெல்வேலி, திருப்பூரில் தலா 14, திருவள்ளூரில் 13, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் தலா 12, வேலூரில் 14 என மொத்தம் 564 அலுவலக உதவியாளா் இடங்கள் காலியாக உள்ளன.
இந்தக் காலியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப் பணி விதிகளில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படியும், இப்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நிரப்பிக் கொள்ளலாம்" இவ்வாறு கூறியிருந்தார். இதன்படியே அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
சம்பள விவரம்: இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ. 15700 முதல் ரூ. 58100 வரை சம்பளம் கிடைக்கும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் பொதுப்பிரிவினர் 32 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், முஸ்லிம்பிரிவினர் 34 வயது வரையிலும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி:அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications