மாதசம்பளம் ரூ.40,000.. என்ஜினீயரிங், மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் வேலை! செம வாய்ப்பு
ஹைதராபாத்: மத்திய அரசின் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் மாதசம்பளம் ரூ.40 ஆயிரம் அல்லது ரூ.1 லட்சம் என்ற அளவில் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பணியை தட்டித்தூக்கலாம்.
மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் என்ஆர்டிபிஆர் எனும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகர் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: என்ஆர்டிபிஆர் நிறுவனத்தில் தற்போது 10 பிரிவுகளில் கன்சல்டன்ட் பணிக்கு 19 பேரும், அக்கவுண்ட்ஸ் மற்றும் டிரெய்னிங் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோஆடினேட்டர் பதவிக்கு 5 பேர் என மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு: கன்சல்டன்ட்ஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 62 வயதுக்குள் இருக்க வேண்டும். டிரெய்னிங், அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டவ் கோஆடினேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 16.08.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: கன்சல்டன்ட்ஸ் பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். டிரெய்னிங் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். கன்சல்டன்ட்ஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரி, பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங், ஐடி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பம்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://career.nirdpr.in/ எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி , எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி காலம்: இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும் கன்சல்டன்ட்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தது 2 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். டிரெய்னிங், அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டவ் கோஆடினேட்டர் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 5 ஆண்டுகள் வரை பணியமர்த்தப்பவுார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காணவும், விண்ணப்பம் செய்யவும் Click Here












Click it and Unblock the Notifications