இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை.. உதவி மேலாளர் பணியிடம்.. டிகிரி தகுதி தான்!
சென்னை: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் (IPPB) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கியாகும். கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியானது, நாடு முழுக்க கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேவைகளை வழங்கி வருகிறது.

பணியிடங்கள் விவரம்
அஞ்சல் நிலையங்கள் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் மூலமாக சேமிப்பு கணக்கு திறப்பு, பணம் அனுப்புதல், பில்கள் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் வீடு தோறும் வங்கி சேவைகளை வழங்குவது இதன் சிறப்பாகும். தற்போது இந்த வங்கியில் உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
* உதவி மேலாளர் - 110 காலியிடங்கள்
* ஜூனியர் அசோசியேட் - 199 காலியிடங்கள் என மொத்தம் 309 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும்.
வயது வரம்பு:
* உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சமாக 20 வயது நிரம்பியவர்களாகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
* ஜூனியர் அசோசியேட் பணிக்கு, குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
* அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ippbonline.com மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். நேற்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
தேர்வு முறை:
பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருப்பினும், தேவைப்படின் ஆன்லைன் தேர்வு அல்லது குழு விவாத நேர்காணல் நடத்த வங்கிக்கு உரிமை உண்டு. மேலும் விவரங்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை ரூ.750 செலுத்த வேண்டும். இது ஒரு தற்காலிக பணியாகும். ஒரு வருடத்திற்கு மட்டுமே இந்த பணி நியமனமானது செல்லுபடியாகும். வங்கியின் தேவைகளுக்கு ஏற்ப, திருப்திகரமான செயல்திறனின் அடிப்படையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பணியானது நீட்டிப்பு செய்யப்படலாம்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications