இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா.. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வந்தது மெகா அறிவிப்பு
சென்னை: கடலூரில் வரும் 2024 ஜனவரி 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக சென்னையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு தலைமையகத்தின் இயக்குனர் பாத்ரே அறிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று விரும்புவோர் அதற்கு தயாராகலாம். அடுத்த இரண்டு மாதத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்த கொண்டு தேர்வில் வென்று உடல் தகுதி தேர்விலும் வென்றால் உடனே பணியில் சேர முடியும். ராணுவத்தில் சேர வேண்டும் என்று சிறு வயது முதலே கனவுகளுடன் வாழ்பவர்களுக்கு 2024ம் ஆண்டின் தொடக்கத்திலேயே வாய்ப்பு அமைந்துள்ளது.

அதேநேரம் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு உடற்தகுதி தேர்வும், பின்னர் எழுத்து தேர்வும் நடக்கும். ஆனால் இப்போது தொடக்கத்திலேயே ஆன்லைன் எழுத்துத்தேர்வும், அதன்பிறகு உடல் தகுதித்தேர்வும் நடத்தப்பட உள்ளது. முன்னதாக 2023-24-ம் ஆண்டுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், நடப்பாண்டுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு தலைமையகத்தின் இயக்குனர் பாத்ரே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "நடப்பாண்டுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா மைதானத்தில் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஆள்சேர்ப்பு முகாமில் உடல் தகுதிக்கு மட்டுமே இளைஞர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். சான்றிதழ்கள் மீது குறைவான கவனம் செலுத்துகின்றனர். அதன் காரணமாக, நடப்பாண்டு முதல் உடல் தகுதிக்கு நிகராக, ஆவணங்களும் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும்.
முகாமில் பங்கேற்பவர்கள், தேர்வு நுழைவுச்சீட்டு, கல்வி சான்றிதழ்கள், போலீஸ் நடத்தை சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்பட 18 வகையான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்களின் தேர்வுகள் நிராகரிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications