Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் அதிரடி மாற்றம்.. ஆன்லைன் தேர்வு முதல்.. விண்ணப்பம் வரை முழு விவரம்

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பில் முதல் முறையாக ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE) செயல்முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: இந்திய ராணுவ ஆள்சேர்ப்பில் முதல் முறையாக ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE) செயல்முறை கொண்டுவரப்படுவதாக திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கெர்னல் தீபக் குமார் கூறினார்.

ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy. nic. in என்ற இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி வரை ஆர்வமுள்ளவர்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு நேரடியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என கெர்னல் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கெர்னல் தீபக் குமார் புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம்‌ பேசுகையில், "திருச்சி மண்டல ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் சார்பில் ராணுவத்துக்கு அக்னிபாதை (அக்னிபாத்) திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆள்சோ்ப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

எப்படி

எப்படி

ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE) இந்திய இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையின் முதல் கட்டமாக இருக்கும். www.joinindianarmy.nic.in இணையதளத்தில் 16 பிப்ரவரி 2023 முதல் 15 மார்ச் 2023 வரை இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

திருச்சியில்

திருச்சியில்

ஆன்லைன் பொது நுழைவு தேர்வு 17 ஏப்ரல் 2023 முதல் 30 ஏப்ரல் 2023 வரை இந்தியா முழுவதும் 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும். திருச்சி மண்டலத்தில் திருச்சியில் இரண்டு மையங்களிலும் திருநெல்வேலியில் ஒரு மையத்திலும் இணையதள தேர்வு நடைபெறும்.

ஆங்கிலம்

ஆங்கிலம்

விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை நன்கு அறிந்துகொள்ள உதவும் வகையில், 'பதிவு செய்வது எப்படி' மற்றும் 'ஆன்லைன் நுழைவுத் தேர்வில் கலந்துகொள்வது எப்படி' பற்றிய கல்வி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவினருக்கும் மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இணைப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே கணினி அடிப்படையிலான தேர்வில் கலந்துகொள்ளலாம். தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நடைபெறும்.

250 கட்டணம்

250 கட்டணம்

ஆன்லைன் பொது நுழைவு தேர்வுக்கான கட்டணம் ஒரு வேட்பாளருக்கு ரூ.500/- என்ற போதிலும் 50% செலவை ராணுவம் ஏற்கும் என்பதால் விண்ணப்பதாரர்கள் ரூ. 250/- செலுத்தினால் போதும் தேர்வாளர்கள் ஐந்து தேர்வு மையங்கள் பதிவு செய்து அதிலிருந்து அவர்களுக்கு தேர்வு இடம் ஒதுக்கப்படும். உதவி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

சிக்காதீங்க

சிக்காதீங்க

பதிவு கேள்விகளுக்கு, வேட்பாளர்கள் மின்னஞ்சல் செய்யலாம். [email protected] மற்றும் ஆன்லைன் CEE வினவல்களுக்கு அவர்கள் [email protected] மற்றும் மொபைல் எண்.7996157222க்கு மின்னஞ்சல் செய்யலாம். அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்புகாக 17 1 /2 முதல் 21 வயது வரை உள்ளவரக்ள் விண்ணப்பிக்கலாம். இத் தோ்வு நியாயமாகவும், வெளிப்படையாகவும் தகுதி அடிப்படையில் நடைபெறுகிறது. இதில் சேர எந்த நிலையிலும் யாருக்கும் லஞ்சம் தரக்கூடாது. ஆள்சோ்ப்பு முகவா்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் நோ்மையறற நபா்களிடம் யாரும் சிக்க வேண்டாம் இவ்வாறு கெர்னல் தீபக் குமார் கூறினார். பேட்டியின் போது மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை திருச்சி மாவட்ட கள விளம்பர அலுவலா் தேவிபத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+