Indian Railway Job: இந்தியன் ரயில்வேயில் வேலை.. டிகிரி போதும்! 1 லட்சத்திற்கு மேல் சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு (Indian Railway Job) அறிவிக்கப்பட்டுள்ளது. செக்ஷன் கன்ட்ரோலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை 1.10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு என்ன போன்ற விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நல்ல சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைப்பதால் ரயில்வே துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது.

பணியிடங்கள் விவரம்:
ரயில்வேயை பொறுத்தவரை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. காலிப்பணியிடங்களுக்கு தகுந்த அறிவிப்பு வெளியிட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் தான், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* செக்ஷன் கன்ட்ரோலர் - 368 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
* கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படும். வயது வரம்பு 14.10.2025 தேதியிட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் லெவல் 6 படி சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளமாக கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழி தேர்வு (சிபிடி), மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்:
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ரூ.500 விண்ணப்ப கட்டணமாக கோரப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணம் ஆகும்.
சிபிடி தேர்வு எழுதிய பிறகு முழுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். ரூ. 500 கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.400 திருப்பி தரப்படும். தேர்வுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 14.10.2025 ஆகும்.
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications