டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல்லில் புதிதாக ஆட்களை தேர்வு செய்ய திட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படவுள்ளது.
கொரோனா பரவலை அடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையை இழந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் தொழிலை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றிவிட்டதால் தற்போது ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த ஆண்டு 40 ஆயிரம் பேரையும், இன்போசிஸில் 25 ஆயிரம் பேரையும் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 1,10,000-க்கும் மேற்பட்டோரை பணியமர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இவை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணியமர்த்தியது.












Click it and Unblock the Notifications