IT Jobs: மே 23ம் தேதி சென்னையில் இண்டர்வியூ.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ சென்னை சிறுசேரியில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் மே 23ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது AML - Transaction Monitoring பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் இடைவெளி இன்றி பள்ளி, கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணி இருக்கும். இதனால் அனைத்து வகையான ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
இதுதவிர சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி Case Review-வில் ரெட்பிளாக்கை அடையாளம் காண வேண்டும்.இன்டர்நேஷனல் பேங்கிங் மற்றும் குளோபல் பேங்கிங் உள்ளிட்டவற்றில் அனுபவம்கொண்டிருக்க வேண்டும். PFB நார்ம்ஸ் பின்பற்ற வேண்டும். இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றி வருவோர் என்றால் அங்கிருந்து Relieving Letter கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ மே 23ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services Ltd, 1/G1,SIPOT IT Park Navalur, Siruseri, Chennai, Tamil Nadu 603 103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூவுக்கு செல்வோர் அரசு அடையாள அட்டை ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் வை்ததிருக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அனைத்து வகையான கல்வி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள், இபிஎஃப்ஓ-வின் ஜெராக்ஸ் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம் . தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம் . பணிக்கு விண்ணப்பிக்க Click Here செய்யவும்.
அதேவேளையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டாம்என்று கூறப்பட்டுள்ளது. கல்லூரி படிப்புக்கும், பணிக்கும் இடையே 2 ஆண்டு மட்டுமே இடைவெளி இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்க கூடாது.
அதேபோல் கடந்த 6 மாதம் இண்டர்வியூவில் பங்கேற்றவர்கள் என்றால் இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. டிசிஎஸ் சார்பில் பணி நியமனம் அல்லது இண்டர்வியூவுக்கு என்று பணம் எதுவும் கேட்கப்படாது. இதனால் யாரும் பணம் கொடுத்து ஏாமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications