பிளஸ் 2 முடித்தால் போதும்! ரயில்வே கொடுத்த பொன்னான வாய்ப்பு.. 2 நாள்தான் டைம் இருக்கு! மறந்துடாதீங்க
சென்னை: இந்திய ரயில்வேயில் என்டிபிசி தொழில் நுட்பம் சாராத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளது. எனவே, தகுதியும் ஆர்வமும் இருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்துவிடுங்கள்.
ரயில்வேயில் வேலைக்கு சேர வேண்டும் என்பது வேலை தேடும் இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம், சலுகைகள் ஆகியவை கிடைக்கும் என்பதால் ரயில்வேயில் எப்படியாவது வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்று பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகிறார்கள். ரயில்வேயில் காலிப்பணியிடங்களை பொறுத்தவரை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக நிரப்பப்படுகிறது.

அவ்வப்போது காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ரயில்வே அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், என்.டி.பி.சி எனப்படும் தொழில் நுட்பம் சாராத பணியிடங்கள் (12 ஆம் வகுப்பு தகுதி) நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. கமெர்ஷியல் டிக்கெட் கிளர்க் - 2022 பணியிடங்கள்
2. அக்கவுண்ட்ஸ் கிளர்க் - 361
3. ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட் - 900
4. டிரெயின்ஸ் கிளர்க் - 72
என மொத்தம் 3,445 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி & வயது வரம்பு: மேற்கூறிய 4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 - 33 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்டி பிரிவினராக இருந்தால் 38 வயது வரையும், ஒபிசி பிரிவினராக இருந்தால் 36 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: கமெர்ஷியல் டிக்கெட் கிளர்க் பணியிடத்திற்கு ரூ.21,700 (லெவல் 3) ஆரம்ப சம்பளமாக வழங்கப்படும். இதுபோக அரசு விதிகளின் படி அனைத்து சலுகைகளும் உண்டு. இதர மூன்று பணியிடங்களுக்கும் ஆரம்ப சம்பளமாக ரூ.19,900 கிடைக்கும்.
தேர்வு முறை: கணினி வழியிலான தேர்வு நடைபெறும். சிபிடி என சொல்லப்படும் இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். டைப்பிங் திறன் டெஸ்ட் உள்ளிட்டவையும் வைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப் கட்டணம் ரூ.500 ஆகும். ஸ்டேஜ் 1 கணினி வழியிலான தேர்வு எழுதிய பிறகு ரூ.100 பிடித்தம் போக 400 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.
எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். இவர்களுக்கு முழு கட்டணமும் ஸ்டேஜ் 1 தேர்வு எழுதிய பிறகு திருப்பி அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 27.10.2024 தான் கடைசி நாள் ஆகும். இன்னும் இரண்டு நாள்தான் அவகாசம் இருப்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.. தேர்வு அறிவிப்பினை படிக்கவும் விண்ணப்பிக்கவும் இந்த லிங்கை கிளிக் https://www.rrbchennai.gov.in/ செய்யவும்.
-
IIT Madras: சென்னை ஐஐடியில் வேலை.. ஆசிரியர் பணியிடங்கள்.. ஒரு லட்சம் வரை சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -
job: தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! -
IT JOBS: சென்னை - பெங்களூர் உள்பட 5 இடங்களில் ஐடி வேலை.. TCS தரும் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்












Click it and Unblock the Notifications