ரூ.89,150 வரை மாதசம்பளம்.. டிகிரி, என்ஜினியரிங் படித்தவரா நீங்கள்? நபார்டு வங்கியில் சூப்பர் வேலை
சென்னை: நபார்டு வங்கியில் டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,500 முதல் ரூ.89,150 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் சுருக்கம் தான் நபார்டு (National Bank For Agriculture And Rural Development - NABARD).

இந்த வங்கியில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
காலியிடம்: நபார்டு வங்கியில் 11 பிரிவுகளில் உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பொதுப்பிரிவுக்கு 77 பேர், கம்ப்யூட்டர்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரவுக்கு 40 பேர், பைனான்ஸ் பிரிவுக்கு 15 பேர், கம்பெனி செக்ரட்டரி, சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவுக்கு தலா 3 பேர், ,ஜியோ இன்பரமேட்டிக்ஸ் பாரஸ்ட்ரி, புட் ப்ராசசிங்க், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பிரிவுக்கு தலா 2 பேர், மாஸ் கம்யூனிகேசன்/மீடியா ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு ஒருவர் என மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பை ஏதேனும் ஒரு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். என்ஜினியரிங் பிரிவு பணிக்கு பிஇ சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் ஜியோ இன்பர்மெட்டிக்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாஸ் கம்யூனிகேசன்/மீடியோ ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு இளங்கலை பிரிவில் மாஸ் மீடியா, ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன், அட்வடைஸ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 21 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.09.2028 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்பிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.
மாத ஊதியம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.44,500 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.89,150 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.800ம், எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் (இன்று ) ஆன்லைனில் www.nabard.org இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனிலில் விண்ணப்பம் செய்ய Click Here
-
நீலகிரி அருவங்காடு தொழிற்சாலையில் வேலை.. இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ் -
IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு சென்னை எச்சிஎல் தரும் வேலை.. ஏப்ரல் 6ல் இண்டர்வியூ -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னை - ஹைதராபாத் உள்பட 5 இடங்களில் நியமனம் -
சென்னையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்! சூப்பர் சான்ஸ்.. விட்றாதீங்க -
நாணயம் அச்சிடும் ஆலையில் வேலை.. 95,000 சம்பளம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அப்ளை பண்ண ரெடியா? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications