Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.89,150 வரை மாதசம்பளம்.. டிகிரி, என்ஜினியரிங் படித்தவரா நீங்கள்? நபார்டு வங்கியில் சூப்பர் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நபார்டு வங்கியில் டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,500 முதல் ரூ.89,150 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.

விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் சுருக்கம் தான் நபார்டு (National Bank For Agriculture And Rural Development - NABARD).

 NABARD Bank recruitment 2023 for 150 Assistant Manager Post

இந்த வங்கியில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

காலியிடம்: நபார்டு வங்கியில் 11 பிரிவுகளில் உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பொதுப்பிரிவுக்கு 77 பேர், கம்ப்யூட்டர்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரவுக்கு 40 பேர், பைனான்ஸ் பிரிவுக்கு 15 பேர், கம்பெனி செக்ரட்டரி, சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவுக்கு தலா 3 பேர், ,ஜியோ இன்பரமேட்டிக்ஸ் பாரஸ்ட்ரி, புட் ப்ராசசிங்க், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பிரிவுக்கு தலா 2 பேர், மாஸ் கம்யூனிகேசன்/மீடியா ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு ஒருவர் என மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பை ஏதேனும் ஒரு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். என்ஜினியரிங் பிரிவு பணிக்கு பிஇ சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் ஜியோ இன்பர்மெட்டிக்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாஸ் கம்யூனிகேசன்/மீடியோ ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு இளங்கலை பிரிவில் மாஸ் மீடியா, ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன், அட்வடைஸ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 21 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.09.2028 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்பிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.

மாத ஊதியம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.44,500 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.89,150 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.800ம், எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் (இன்று ) ஆன்லைனில் www.nabard.org இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனிலில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+