ரூ.89,150 வரை மாதசம்பளம்.. டிகிரி, என்ஜினியரிங் படித்தவரா நீங்கள்? நபார்டு வங்கியில் சூப்பர் வேலை
சென்னை: நபார்டு வங்கியில் டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,500 முதல் ரூ.89,150 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் சுருக்கம் தான் நபார்டு (National Bank For Agriculture And Rural Development - NABARD).

இந்த வங்கியில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
காலியிடம்: நபார்டு வங்கியில் 11 பிரிவுகளில் உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பொதுப்பிரிவுக்கு 77 பேர், கம்ப்யூட்டர்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரவுக்கு 40 பேர், பைனான்ஸ் பிரிவுக்கு 15 பேர், கம்பெனி செக்ரட்டரி, சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவுக்கு தலா 3 பேர், ,ஜியோ இன்பரமேட்டிக்ஸ் பாரஸ்ட்ரி, புட் ப்ராசசிங்க், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பிரிவுக்கு தலா 2 பேர், மாஸ் கம்யூனிகேசன்/மீடியா ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு ஒருவர் என மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பை ஏதேனும் ஒரு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். என்ஜினியரிங் பிரிவு பணிக்கு பிஇ சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் ஜியோ இன்பர்மெட்டிக்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாஸ் கம்யூனிகேசன்/மீடியோ ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு இளங்கலை பிரிவில் மாஸ் மீடியா, ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன், அட்வடைஸ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 21 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.09.2028 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்பிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.
மாத ஊதியம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.44,500 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.89,150 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.800ம், எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் (இன்று ) ஆன்லைனில் www.nabard.org இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனிலில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT JOBS: 11 பிரிவுகளில் ஐடி வேலை.. மார்ச் 14ல் இண்டர்வியூ.. சென்னை - பெங்களூரில் வேலை -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications